கடமை இல்லையா.சந்தோஷமா வாழ்க்கையை தொடங்கு..ம்ம்..போ நேரமாச்சு பாரு..”
“தேங்க்ஸ் மா..”
“!!”
“ஏனோ அத்தைனு கூப்பிட தோணல இப்படியே கூப்டுகுறேன்..கூப்பிடலாம் தான?”
“இப்போ தான சொன்னேன் உனக்கு பிடிச்ச மாதிரி இருனு..எனக்கு பொண்ணு இல்லாத குறை தீர்ந்தது..போ ரெடிஆய்ட்டு வா”,என்று அனுப்பி வைத்தவர்அவள் வந்ததும் அவளை தயார் செய்து ஆத்விக்கின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
உள்ளே சென்றவளுக்கு எத்தனை முயன்றும் பதட்டம் மட்டும் குறைந்தபாடில்லை.ஆத்விக் கட்டிலில் அமர்ந்திருக்க அவனருகே சென்றவள் குனிந்து பாதம் பணிய எத்தனிக்க அவசரமாய் கைப் பிடித்து நிறுத்தியவன்,
“ஹே இதெல்லாம் என்னவோ போல இருக்கு பேசாம இப்படி உக்காரு..”
“இல்லை எல்லாரும் சொல்லி தான் அனுப்பினாங்க..”
“அவங்க ஆயிரம் சொல்லு வாங்க..ஏதோ ரொம்ப அந்நியமா இருக்கு..நீ உக்காரு பர்ஸ்ட்..ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க ஷான்!”
“ஹாங்!!அது அதெல்லாம் ஒண்ணுமில்ல..”
“ரிலாக்ஸ்..பர்ஸ்ட் டைம் நம்ம ரூம்க்கு வந்துருக்க அப்போ கிப்ட் எதாவது கொடுக்கணுமே!”,என்றவன் கட்டிலில் வைத்திருந்த பரிசுப் பெட்டியை அவளிடம் கொடுக்க ஆர்வத்தோடு கூடிய கேள்வியாய் அவனை ஏறிட்டாள்.
“பிரிச்சு பாருங்க மேடம்..”
மெதுவாய் அதைப் பிரித்தவள் உள்ளிருந்த புடவையையும் கைக் கடிகாரத்தையும் கண்டு விழி விரித்தாள்.
“ரொம்ப நல்லா இருக்குங்க..தேங்க் யூ..”
“ம்ம் முதல் நாள் டியூட்டி ஜாயின் பண்ணும்போது இதை தான் போட்டு போணும்..”
“இன்னும் ரிசல்ட்டே வரல அதுக்குள்ளேயே வா?”
“எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா பாஸ் ஆய்டுவனு அதான் முதல்லயே வாங்கி வச்சுட்டேன்.”
“லவ் யூ ஆத்வி..நான் என்ன பீல் பண்றேன்னு என்னால எக்ஸ்ப்ளெயின் பண்ண முடியுமானு கூட தெரில.பீ வித் மீ ஆல்வேஸ்..அது போதும்..”
“நீயே நினைச்சாலும் என்னை விட்டு எங்கேயும் போக முடியாது ஷான் செல்லம்..”,எனும்போதே ஷான்யாவின் போன் ஒலிக்க இந்த நேரத்தில் யாராய் இருக்கும் என்று பதட்டமாய் போனை