பார்த்தவள் ஜீவிகாவின் எண் என்றதும்ஆத்விக்கிடம் காட்டினாள்.
“ஜி யா!!இந்த நேரத்துல என்னனு தெரிலேயே பேசு ஷான் என்னனு கேளு..”
“ஜீவிக்கா!!”
“அட என்ன ஷானுக்குட்டி இப்படி முதல் கால்லயே எடுத்துட்ட நான் கூட ஒரு நாலஞ்சு தடவை கால் பண்ணணும்னு நினைச்சேன்.”
“என்னக்கா என்னாச்சு சொல்லுங்க..”
“இல்ல எனக்கு மருமகனோ மருமகளோ ரெடியானு கேக்க தான் கால் பண்ணேன்.”,என்று கூறி முடிக்க ரினிஷா சிரிக்கும் சத்தம் கேட்டது.
“அக்கா!!உங்களை என்ன பண்ணலாம்?ரினிக்கா நீங்களுமா..”
“சாரி ஷான்..ஜீயோட ப்ளான் கேட்டவுடனே எக்ஸைட் ஆய்ட்டேன் அதான் ஓகே சொல்லிட்டேன்..”
ஷான்யாவின் முகம் சிவந்த விதத்திலேயே ஆத்விக்கிற்கு விஷயம் புரிந்துவிட உடைமாற்றி வருவதாய் கூறி குளியலறைக்குச் சென்றான்.
“அக்கா அவர் முன்னாடி மானம் போகுது ஏன்க்கா நீங்க இப்படி இருக்கீங்க!!”
“நம்ம பய அவன்.. இதுக்கெல்லாம் பீல் பண்ணக் கூடாது..சட்டு புட்டுனு பதில் சொல்லு செல்லக் குட்டி..”
“ஹய்யோ..ரூம்க்கு வந்தே பத்து நிமிஷம் தான் ஆகுது..”
“ஓ சிவ பூஜையியில கரடினு சொல்ற..”
“கருமம் கருமம் அதெல்லாம் ஒண்ணுமில்ல..நாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே டிசைட் பண்ணது தான்..எனக்கு போஸ்டிங் கிடைச்ச அப்பறம் தான்…”
“அடக் கொடுமையே..போங்கடா நீங்களும் உங்க சாந்தி முகூர்த்தமும்..உங்க ரெண்டு பேரையும் என்னவோனு நினைச்சா..ம்ம்கும் நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க போலேயே!!”
“அக்கா!!”
“அட ஏன்ம்மா நீ வேற அப்பப்போ வில்லன் எபெக்ட்ல என்ன கூப்டுட்டே இருக்கே..ம்ம் போ போய் இழுத்து மூடி தூங்கு..ப்யூச்சர்ல நம்ம ரினி செல்லத்தை பாரு கல்யாணம் ஆன அடுத்த மாசமே..”
“ஆளை விடும்மா நான் ஓடிட்டேன்..பை ஷான்..சாரி பார் தி டிஸ்டபென்ஸ்..ஸ்வீட் ட்ரீம்ஸ்..”,என்றவள் காலை கட் செய்து விட,
“ம்ம் நீயும் போய் தூங்கு ஷான்யா செல்லம் என் நண்பன் நிலைமை இத்தனை பாவமா இருக்கும்னு நினைக்கவே இல்ல போ..”,எனும்போதே ஆத்விக் வெளியே வந்தவன் ஷான்யா இன்னும் போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து வேகமாய் அதை வாங்கி,
“நீயெல்லாம் என் கூட இருக்குற வரை எனக்கு புள்ளையே பிறக்காது ஜி எருமமாடே..ஒழுங்கா
போய் தூங்கு குட்நைட்..”,என்றவன் போனை அணைத்து ஷான்யாவிடம் கொடுக்க பற்கள் தெரிய சிரித்து விட்டிருந்தாள்.
“என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கு??”
“ஹா ஹா இல்ல இல்ல சாரி மை டியர் புருஷா..”,என்றவள் வாகாய் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
அங்கு ஜெயந்தோ ஜீவிகாவை,”இதெல்லாம் ஒரு பொழப்பா”,எனும் ரீதியில் பார்த்து வைக்க அசடு வழிய சிரித்தவளாய்,
“நோ நோ டென்ஷன் மாம்ஸ்..தூங்குங்க தூங்குங்க குட் நைட்..”,என்றவள் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள்.
தொடரும்...