தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 11 - குருராஜன்
“அப்படியே முதல் இரவில் பேசினாலும், நான் அதையேதான் சொல்லுவேன். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை, விவாகரத்து கொடு நு” என்று பட படத்தால் நிலா.
அதைக் கேட்ட அனைவருக்கும் shock ஆகி அவளையே பார்த்தனர்.
ஏதோ ஒரு வேகத்தில் அவள் விவாகரத்து என்று சொல்லிவிட்டால் ஆனால் அவள் கூறிய அந்த வார்த்தையை மீண்டும் அவள் மனதில் ஓட்டி பார்த்த போது அவள் உடல் நடுங்கியது.
அதன் பின்னர் யாரும் ஏதும் பேசவில்லை. அனைவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்துவிட்டு officeக்குல் சென்றனர். போகும் வழியில் நிலா இன்னொரு முறை ரகுவிற்கு கால் செய்து பார்த்தாள் switched off என வந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாலை நிலா, சிவகாமி மற்றும் சங்கர் அனைவரும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் சிவகாமியின் அன்னையைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வயது மூப்பின் காரணமாக அவரின் உடல் நிலையில் சின்ன பின்னடைவு.
காரில் மூவரும் அமைதியாக வந்து கொண்டிருந்தனர். அந்த அமைதியை கலைக்கும் வகையில்“நிலா, இந்த Sunday” என்று இழுத்தார் சிவகாமி.
“என்னமா இந்த sundayக்கு” என்று கேட்டாள் நிலா.
“இந்த Sunday நாள் நல்ல இருக்கு டி. அதனால் மாப்பிள்ளை பையன் வீட்டில் இருந்து எல்லாம் நம்ம வீட்டுக்கு வராங்க டி” என்றார் சிவகாமி.
யாரைச் சொல்கிறார்கள் என்று நிலாவிற்குப் புரிந்தது, ஆனால் என்ன நடக்கப் போகிறது என்றுதான் புரியவில்லை.
“எதுக்கு மா, என்ன விஷயம்” என்றாள் நிலா பதற்றமாக.
“நிலா கல்யாணம்னா இந்த formalities எல்லாம் இருக்கும் மா. Simpleஆ சொல்லனும்னா பொண்ணு பார்க்க வராங்க” என்று நிலாவின் கேள்விக்குப் பதில் கூறினார் சங்கர்.
தன்னை சுற்றி நடக்கும் ஒவ்வொரு கல்யாணம் சம்பந்தப் பட்ட விஷயமும் நிலாவிற்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. விருப்பம் இல்லாத விஷயத்திற்காக, மீண்டும் மீண்டும் அலங்காரம் எல்லாம் செய்து கொண்டு சேலை கடை பொம்மை போல் எல்லோர் முன்னாடியும் நிற்க வேண்டும் என்று நினைத்தாலே அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
“அதுதான் ஏற்கனவே எல்லாம் பார்த்தாச்சு இல்ல பா அப்புறம் ஏன் மறுபடியும்” என்றாள் நிலா.
“இல்ல நிலா, அன்னைக்கு எதுவும் சரியா நடக்கல. நாங்க அந்த பையன பார்த்தோம்,