பரிச்சயம் இல்லை என்றாலும் எங்கையோ பார்த்திருக்கிறேன்” என்று தன் மூலையை போட்டு கசக்கினாள் நிலா, ஆனால் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.
“ஏய் நிலா, உன் ஆளை sight அடிச்சது போதும், போய் காபிய குடு” என்று பக்கத்தில் இருந்த நிஷா கிண்டலாகச் சொன்னாள்.
அதுவரை அவனை எங்குப் பார்த்தோம் என்று தனக்குள் ஆழமாகத் தேடிக்கொண்டிருந்தவள், நிஜ உலகத்திற்கு வந்தாள். நடந்து சென்று, சிரித்த முகத்தோடு (தன் இஷ்டம் இல்லாமையை தனக்குள் புதைத்துக் கொண்டு) ஒருவர் ஒருவருக்காக காபியைக் கொடுத்துக் கொண்டே மெல்லமாக ரகு அருகில் வந்தாள்.
அதுவரை எங்கோ பார்த்துக் கொண்டிருந்த ரகு, அவள் பக்கம் திரும்பி காபி தட்டை பார்த்த வாரே காபியை எடுத்தான். அவன் காபி எடுக்கும் போது நிலா அவன் முகத்தை உற்று ஒரு முறை பார்த்தால், அப்போதும் அவனை எங்கோ பார்த்து இருக்கிறோம் என்று தான் அவளுக்கு தோன்றியது, ஆனால் எங்கே எப்படி என்று அவளுக்கு ஞாபகம் வரவில்லை.
அனைவருக்கும் காபியைக் கொடுத்துவிட்டு மீண்டும் நிஷா பக்கத்தில் போய் நின்றாள்.
“என்ன மச்சி, பையனை நல்லா sight அடிச்சிக்கிட்டியா” என்று நிலாவின் காதில் முணுமுணுதாள் நிஷா.
“அடங்கு டி” என்று கோவமாக முகத்தைக் காட்டி நிலாவும் முணுமுணுதாள்.
பெரியவர்கள் அனைவரும் காபியைக் குடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்க, ரகுவை பார்த்தவாரே இன்னும் ஆழமாக யோசித்தாள் நிலா. அப்போதும் அவனை எங்குப் பார்த்தோம் என்பதற்கான விடை இல்லை. சரி அதை விட்டு தல்லு, அடுத்து நடக்க வேண்டியதைப் பார்ப்போம். இவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, நான் அவனுடன் பேச வழிவிட்டால் எல்லாவற்றையும் போட்டு அவனிடம் உடைத்து விடலாம் என்று அங்க பேசிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் ஏக்கத்தோடு பார்த்தாள்.
மீண்டும் ரகுவை நிலா பார்க்க, அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்து இருந்தான்.
“இவன் இந்த கல்யாணத்தில் விருப்பத்தோடு அமர்ந்திருக்கிறானா, பார்த்தால் எதுவும் தெரியவில்லை. நான் வந்ததில் இருந்து இவன் என்னைக் கவனித்ததாகக் கூட தெரியவில்லை. ஒரு வேளை நாம அழகா இல்லையோ,” என்று நினைத்துக் கொண்டு எதிரில் இருந்த கண்ணாடியை ஒரு முறை பார்த்துக் கொண்டாள் நிலா. “ச்சச அதெல்லாம் நல்லாதான் இருக்கிறோம். அவன் தான் திமிர் பிடிச்சவன் போல” என்று அவனை மனதுக்குள் திட்டினாள் நிலா.
“நீங்க எல்லாம் வந்ததில் ரொம்ப சந்தோஷம் சம்பந்தி. ஆனா ஒரு விஷயம்” என்று