நிலாவிற்கும் அதுதான் வேண்டும் “thanks பா” என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.
“என்னங்க அவ கேட்டானு சரினு சொல்லிட்டீங்க. இவ எதாவது பேசி அந்த பையனுக்கு இவளை பிடிக்காம போயிடுச்சினா” என்று தன் மகளின் மனதை படித்தவாறு கேட்டார் சிவகாமி.
“என்ன சிவகாமி பேசுற, நாம ஒன்னும் நம்ம பொண்ணுக்கு கட்டாய திருமணம் செய்யல. அவளோட பெற்றோர் என்ற முறையில் அவளுக்கு ஏற்றார் போல் ஒரு பையன பார்த்திருக்கோம். அது மட்டும் இல்லாம இது அவ வாழ்க்கை. கடைசி வரை ரெண்டு பேரையும் பேசிக்க விடாமலே கல்யாணத்தை நடத்திட முடியுமா. நல்ல குடும்பம், நல்ல பையனு சொல்லிட்டோம், அதற்கு மேல் அவ வாழ்க்கை அவ கையில் தான் இருக்கு” என்று கூறிவிட்டு அவர்கள் அறைக்குச் சென்றார் சங்கர்.
“என்னமோ, இவள நினைத்தாதான் எனக்கு பயமா இருக்கு. நல்ல படியா எல்லாம் நடக்கனுன் கடவுளே” என்று புலம்பி கொண்டே சிவகாமியும் சங்கர் பின்னால் சென்றார்
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நிலாவும் தன் அறையில் இருந்து கேட்டு கொண்டுதான் இருந்தாள்.
அவர்கள் அவள் நல்லதுகாகதான் செய்கிறார்கள் என்று அவள் மனதிற்குத் தெரிகிறது. ஆனால் அவள் அறிவுதான் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஒவ்வொரு தடவையும் அவள் பெற்றோருக்கு எதிராய் நினைக்கும் போது அவளுக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் காதல் திருமணம் அவள் கனவு அதை எப்படியாவது காப்பாற்றத்தான் போராடுகிறாள்.
ரகுவிடமும் பெண் பார்க்கப் போகும் விஷயம் சொல்லப் பட்டது. அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்றுவிட்டான்.
“என்னங்க இது இவன் அமைதியா போறான். இத சம்மதம்நு எடுத்துக்கிறதா, இல்ல பிடிக்கலனு எடுத்துக்குறதா” என்றார் பானுமதி நாகராஜனைப் பார்த்து.
“நானும் அதே குழப்பத்தில் தான் இருக்கேன். ஞாயற்று கிழமை இவன் நம்ம கூட வந்த சம்மதம், இல்லன” என்று கையை மேலே காட்டி, கடவுள் விட்ட வழி என்பதுப் போல் செய்கை செய்தார்.
மறுநாள் நாகராஜன், பானுமதி, சங்கர், சிவகாமி நான்கு பேரும் சென்னையில் பிரபலமான ஜோதிடர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தனர். இருவரின் ஜாதகத்தையும் வைத்து அடுத்த 5 மாததிற்குள் 3 திருமண தேதிகள் குறித்துத் தரப்பட்டது. அதில் ஒன்று அடுத்த 1