feel பண்ணுவ அத நெனச்சாதான்” என்றாள் நிஷா கிண்டலாக.
அதற்கு “அடி பாவி உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி டீ” என்று கூறி அவள் கையில் செல்லமாகத் தட்டினாள் நிலா.
“இந்த மாதிரி பையனுக்காக, எத்தனை முறை வேணுனாலும் divorce பண்ணலாம் டி” என்றாள் நிஷா.
நிலா எதுவும் பேசாமல் நிஷாவை முறைத்தாள்.
அப்போது, “உள்ளே வரலாமா” என்று கேட்டு கொண்டே நிலா அறைக்குள் நுழைந்தார் பானுமதி.
“aunty வாங்க” என்று கூறிக் கொண்டே தன் இருக்கையில் இருந்து எழுந்து அவரை நோக்கிச் சென்று அவர் கால்ஐ தொட்டுக் கும்பிட்டாள் நிலா.
“100 வருசம் சந்தோஷமா இருமா” என்று என்று ஆசீர்வாதம் செய்தார் பனுமதி. தன் கையில் இருந்த coverல் இருந்து மல்லிகைப் பூவை எடுத்து, “வர வழியில் பூ வாங்க நிறுத்தினோம். மல்லிகைப் பூவை பார்த்ததும் உன் நினைவு வந்துச்சி. அதான் வாங்கிட்டு வந்தேன். அதை கொடுக்கலாம்னு தான் வந்தேன் நிலா” என்று கூறி பூவை நிலாவின் கையில் கொடுத்தார் பானுமதி.
“ரொம்ப thanks aunty. எனக்கு மல்லிகை பூனா ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லி கொண்டே பூவை நிஷாவிடம் கொடுத்து, வைத்து விட நிலா சொல்ல, நிஷாவும் அவள் வைத்திருந்த பூவிற்கு மேலே இந்த மல்லிப் பூவையும் வைத்தாள்.
“Aunty, இவ என் friend நிஷா” என்று நிஷாவை பானுமதிக்கு அறிமுகம் செய்தாள். நிஷாவும் பானுமதிக்கு வணக்கம் சொல்ல, அவரும் நிஷாவை நலம் விசாரித்தார்.
“என்ன மா நிஷா, உன் friend கிட்ட என் பையனைப் பற்றி கொஞ்சம் நல்லதா சொல்லி, என் பையன கல்யாணம் பண்ணிக்க சொல்லி recommend பண்ணுமா” என்றார் பானுமதி. நிஷா ரகுவை பார்ப்பதற்காக வெளியே வந்துவிட்டு வந்ததைத் தானும் பார்த்ததை மறைமுகமாக வெளிப் படுத்தினார்.
அது நிலாவுக்கு நிஷாவிற்கும் புரிந்தது. அசட்டு சிரிப்போட “aunty உங்க பையனுக்கு recommendation எல்லாம் தேவையில்ல. அவர ஒரு தடவை பார்த்தாலே இவ விழுந்து இன்னைக்கே உங்க கூட வந்தாலும் ஆச்சிரிய படுறதுக்கு இல்ல” என்று நிலாவை அணைத்தவாறே வம்பிழுத்தாள் நிஷா.
“வாய மூடுடி அதிகp பிரசங்கி” என்று தன் கை முட்டியால் நிஷாவை விளையாட்டுக்கு இடித்தாள் நிலா.