(Reading time: 14 - 27 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

இழுத்தார் சங்கர்.

சம்பந்தி நு சொல்லிட்டு, அப்பறம் என்ன தயக்கம். சொல்லுங்கஎன்றார் நாகராஜன்.

இல்ல நிலா, மாப்பிளைக்கிட்ட கொஞ்சம் தனியா பேசனுனு ஆசை படுறாஎன்றார் சங்கர்.

சப்பா இப்போவது இதை கேட்கனுனு தோனுசேஎன்று நினைத்து கொண்டு தன் தந்தைக்கு மனதிலே நன்றி கூறினாள் நிலா.

இதில் என்ன இருக்கு, ரகுவும் தான் இன்னும் நிலா கிட்ட பேசல. அவனும் பேசனுனு ஆசைப்பட்டான்என்று நாகராஜன் கூற, ரகு அவரைஎப்போது நான் அப்படிக் கூறினேன்என்பதுபோல் பார்த்தான். ஆனால் அவனை கண்டு கொள்ளாமல்தாராலமா ரெண்டு பேரு பேசட்டும்என்றார் நாகராஜன்.

ரகு, மேலே மாடியில் காத்தாற போய் பேசிட்டு வாங்கஎன்று ரகுவை பார்த்துச் சொல்லிவிட்டு, “நிலா, ரகுவிற்கு அப்படியே வீட்டைச் சுற்றிக் காட்டுமாஎன்றார் சங்கர்.

சரிஎன்பது போல் தலையாட்டி விட்டு, ரகுவை பார்த்தால் நிலா. ஏதோ யோசனையோடு தன் இருக்கையில் இருந்து எழுந்தான் ரகு.

நிலா, இதுதான் டி உனக்கு chance மனசில் இருக்கிறது எல்லாத்தையும் அவன் கிட்ட சொல்லிடுஎன்று தன் மனதில் நினைத்துக் கொண்டால் நிலா.

ரகு மாடிக்குச் சொல்வதற்காக நிலா அருகில் வர, சங்கரின் கைப்பேசி ஒலித்தது. திரையில் பேரைப் பார்த்துவிட்டு, எடுத்து மெள்ளமாகசொல்லுங்க மச்சான்என்றார் சங்கர்.

எதிர் முனையில் பேசியவர் எதோ கூற, பதற்றம் ஆனார் சங்கர் என்ன மச்சான் சொல்றீங்க, எப்போ”.

தொடரும்

Episode # 10

Episode # 12

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.