நடக்கிற விஷயம். இப்போ நடக்குறதோ உன் சமந்தப்பட்டது’.
அவன் கூறியதைக் கேட்டவளுக்கும் , சற்று அதிர்ச்சிதான். கண்ணை மூடி யோசித்ததில் அவன் சொன்ன அந்தத் தொடர்போ என்று தோன்றியது.
“இப்போ என்ன செய்யறது பிரின்ஸ்?”
“ஒன்னும் தோணலை. இப்போ யோசிச்சா ஒன்னும் புரியாது. காலையில் பார்க்கலாம். உனக்கு வரும் கனவிலேயே அதற்கான தீர்வும் கிடைக்கும்ன்னு தோணுது.”
“என்ன பாஸ்? இதுக்கு இவ்ளோ யோசனை? பேசாமல் அந்த செல்வத்தை தூக்கி உள்ளப் போட்டுட்டா அவனே எல்லா உண்மையும் சொல்லிருவானே?
“அப்படி தடாலடியா எதுவும் பண்ணக் கூடாதுன்னு தான் உன்னை அந்தக் கனவு மூலமா இன்சிஸ்ட் பண்ணுதோன்னு நினைக்கிறேன்?”
அப்படியும் இருக்குமோ என்ற யோசனை எழுந்தாலும், அதை தள்ளியவள்,
“இப்போ என்ன செய்யறது?” என்று மட்டும் கேட்டாள்.
“போய் தூங்கு. காலையில் பார்க்கலாம்” என்று கூறி அவளை அனுப்பி வைத்தான். ராகவியும் வந்துருக்கவே, அவளோடு கிருத்திகாவும் சென்று விட்டாள்.
இருவருக்குமே ஒரே யோசனை. அடுத்து என்ன செய்வது என்பது தான்.
அன்றைக்கு இரவு படுத்தவளுக்கு, கனவில் என்ன வருது என்றுப் பார்க்க ஆவலாகக் காத்து இருந்தாள்.
அவள் எதிர்பாரா விஷயம் இன்றைய கனவில் இருந்து இருவருக்கும் ஒரே நேரத்தில், ஒரே விதமான கனவுகள் வர ஆரம்பிக்கின்றது என்பது தான்.
ராணி ஜோதாவுடன் மீண்டும் அவர்களின் பயணம் ஆரம்பிக்கவும், கிரண் தேவி, காமினி இருவரும் ராணியின் பல்லக்குடன் நடந்து வந்தனர். இவர்களுக்கு காவலாக முன்னும் பின்னுமாக வீரர்கள் நடந்து கொண்டிருந்தனர்.
பதேபூர் சிக்ரி அடையவும், அக்பரால் ராணி ஜோதாவிர்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அக்பர் வழக்கப் படி திருமணம் என்னும் நிக்காஹ் முடிந்த பின் , அவர்கள் தங்கள் பிறந்த வீடு செல்வதில்லை. ஏன் இறப்பிலும் கூட அவர்கள கல்லறை அரண்மனையில் மட்டுமே இருக்கும். அப்பேற்பட்ட அக்பர் ஜோதாவின் மேல் இருந்த அன்பால், அவளுக்குப் பிடித்தமான பொருளை அவள் இடத்தில் இருந்து எடுத்து வரச் சொன்னார். அதன் படியே அவளும் செய்து இருக்க, வேறு சில வேலையாட்களும் வந்து இருந்தனர்.
அக்பர் ஜோதாவிடம் “ராணி, இதென்ன? உன் காலுக்கு செருப்புக் கூட அங்கிருந்து எடுத்து