ஜோதா ராணியும் உள்ளே சென்ற பிறகு, கிரண் தேவியின் அருகில் வந்த காமினி
“ராணி, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம். எனவே யாரும் தங்களை கூர்ந்து கவனிக்குமாறு நடந்து கொள்ளாதீர்கள். “ என்று கூறவும், அதில் இருந்த உண்மை புரிந்து கொண்ட ராணியும் , மெலிதாக தலை அசைத்தாள்.
ஆனால் இவர்கள் இருவரும் பேசுவதை வேறு இரு ஜோடிக் கண்கள் கண்டு கொண்டன.
எல்லோரும் ஓய்வெடுத்து விட்டு வந்ததும், தங்களுக்குள் ஒரு தலைவனாக இளவரசன் ப்ரித்வியைக் காவலர்கள் தேர்ந்து எடுத்து இருந்தனர்.
அதைக் கேட்ட ஜோதாவும் சற்று யோசித்தாலும் சரி என்று கூறினாள். அதே போல் ராணி கிரண் தேவியும் தன் பேச்சு சாதுர்யத்தால் ஜோதாவிற்கு நெருக்கமானவளாக வளர்ந்து இருந்தாள்.
ஒரு சில நாட்கள் சென்று இருக்க, அக்பர் ராணியை நாடி வரும்போது வீரர்களை அழைத்து வசதி குறைவுகளைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டார். அப்போது எல்லாம் ப்ரித்வியே மற்றவாரின் சார்பில் அக்பரோடு உரையாட, அவனை நேருக்கு நேர் பார்க்கும் வழக்கத்திற்கு பதில் பார்வை கொடுக்காமல், குனிந்த தலை நிமிராமல் வேலைகளைப் பற்றி மாட்டும் பேசிவிட்டுச் செல்வான்.
தொடரும்!