Page 20 of 28
அவளின் சிரிப்பொலி காதில் விழவும் ரங்கனது கோபம் மறைந்து உற்சாகம் பொங்கியது.
சின்னதம்பியோ ரங்கனை விடாமல் பிடித்துக் கொண்டு நடந்துச் சென்றான். அவர்களை பார்த்துக் கொண்டே பின்னாடியே நடந்து வந்தாள் மிர்ணாளினி. அவளை திரும்பி திரும்பி பார்த்தபடியே நடந்துக் கொண்டிருந்தான் ரங்கன்.
இதில் மிர்ணாளினி சென்ற வழியில் ஒருவன் குறுக்கிட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
தண்ணா, எல்லாம் விதிபடிதான் நடக்கும், அண்ணிக்கும் உனக்கும் கல்யாணம் ஆகனும்ங்கறது விதின்னா, நீங்க ஒத்துமையா வாழப் போறீங்க அதுவும் விதிதான், யாராலயும் விதியை மாத்த முடியாது அண்ணா”