தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீ
காலை எழுந்தவள் உணவு நேரத்துக்கு முன்பாகவே அறையை விட்டு வெளியே வந்தாள்.சிறு தயக்கம் இருந்தாலும் ஆஷிக்கிற்காகவும் பாயல்காகவும் அதுல் வர்மாவை பார்த்து வரலாம் என்று முடிவு செய்தவள் நேராக அவர்கள் அறைக்குச் சென்றாள்.
அறைக்கதவு பூட்டியிருக்க லேசாய் தட்டிவிட்டு காத்திருந்தாள்.
“திறந்துதான் இருக்கு வாங்க..”,என்று பாயல் உள்ளிருந்து குரல் கொடுக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.அதுல் வர்மா அயர்வாய் கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்க பாயல் அவருக்கான உணவை கொடுத்துக் கொண்டிருந்தார்.
“வாம்மா..ஏன் அங்கேயே நின்னுட்ட..”
“குட் மார்னிங் ஆன்டி..அங்கிள் இப்போ எப்படி இருக்கீங்க?”
“ம்ம் பரவால்லம்மா..காயம் தான் அப்பப்போ வலியிருக்கு.மத்தபடி ஒண்ணுமில்ல..”
“ஓ..நேத்து சாய்ந்திரம் வரலாம்னு இருந்தேன் சரி நீங்க ரெஸ்ட் எடுப்பீங்களேனு தான் டிஸ்டர்ப் பண்ணல..நல்லா ரெஸ்ட் எடுங்க சீக்கிரமே சரியாய்டும்..”
“என்னவோ டா நேரமே சரியில்லையோனு தோணுது..மனசே சஞ்சலமா இருக்கு..சாய்ந்திரம் முடிஞ்சா கோவில் போய்ட்டு வரணும்.”
“கவலைபடாதீங்க ஆன்டி..நானும் கூட வரேன்..போய்ட்டு வரலாம்.ஏன் அங்கிள் எப்படி திடீர்னு விழுந்தீங்க..எல்லாரும் இதை தான் கேட்டுருப்பாங்க ஆனாலும் எதாவது உங்களுக்குத் தோணிச்சுனா சொல்லுங்க..”
“ம்ம் சரியா சொல்லத் தெரில டா..இன்னும் அந்த நொடியை நினைச்சா ஒருவித நடுக்கம் வந்துருது.நான் சாதாரணமா தான் நடந்து வந்தேன்.ஏதோ ஒரு உள்ளுணர்வுல ஒரு செகண்ட் நின்னு பின்னாடி திரும்பப் போனேன் அதுக்கப்பறம் எப்படி விழுந்தேன்னு இப்போ வர புரிய மாட்டேங்குது.”
“உள்ளுணர்வா?”
“ஆமா மா எதோ யாரோ நம்மளை கவனிக்குற மாதிரி பின் தொடர்ற மாதிரி..அப்படி தான் உணர்ந்தேன்.ஆனா முத்து அந்த நேரத்துல யாருமே அங்க இல்லனு அடிச்சு சொல்றான்.ஒண்ணுமே புரில..”,என்றவர் தலையை கைகளால் தாங்கிக் கொள்ள அதற்கு மேல் அவரை குழப்ப விரும்பாதவளாய்,
“சரி விடுங்க அங்கிள் எல்லாம் சரியாய்டும்..நீங்க ரெஸ்ட் எடுங்க..நான் அப்பறமா வந்து உங்களைப் பார்க்குறேன்..வரேன் ஆன்ட்டி..”,என்று கூறி வெளியே வந்தவளின் முகம் தீவிர யோசனையில் இருந்தது.
எதிரில் வந்தவரைக் கூட கவனியாது தன் போக்கில் அவளிருக்க அங்கு வந்த முத்து அவளை