வரல மணிக்கணக்கா எத்தனையோ பேர் என்னென்னவோ செஞ்சும் சிலையா உக்காந்துருந்தாங்க..எல்லாம் முடிஞ்சு அவனை வீட்டுக்கு கொண்டு வந்தப்போ பித்து பிடிச்ச மாதிரி எழுந்து ஓடினாங்க…
எதிரிக்குக் கூட வரக் கூடாதுனு நினைப்போமே அந்த மாதிரியான கொடுமை தியாம்மாக்கு நடந்தது.மகிழன் தம்பி நடக்குறது புரிஞ்சும் புரியாததுமா அரண்ட முகத்தோட நின்ன கோலம் செத்தாலும் மறக்காது எனக்கு..
இப்படி யாருமே எதிர்பார்க்காம நடந்த ஒரு இறப்பு இத்தனை வருஷமா இல்லாம அவன் ஆவியா வந்து இங்க எல்லாரையும் கொல்றானாம்.அவனுக்கு அடுத்தவங்களை வாழ வைக்கத் தான் தெரியுமே ஒழிய கெட்டது பண்ண தெரியாது மா..அப்படி இருக்கும் போது தன் குடும்பத்தையே அவன் அழிக்க நினைப்பானா..
ம்ம் மனுஷனோட நாக்கு நரம்பில்லாம எப்போ எப்படி பேசும்னு யாருக்கும் தெரியாது வேற என்னத்தை சொல்றது..”,என்றவர் கண்களில் வழிந்த நீரை அழுந்தத் துடைத்தவாறு ஷியாமாவிடம் விடைப் பெற்றுச் சென்றார்.
தொடரும்...