ஆச்சரியம் என்னனா அவனுக்கும் அப்படியே தோணிணது தான்.இதோ இந்த தோட்டத்துல தான் செடிக்குத் தண்ணி விட்டுட்டு இருந்தேன்.அவன் முகமே அவ்ளோ சோகமா இருந்தது.நான் கூட நினைச்சேன் என்னடா இது கல்யாணம் ஆகி பத்து நாள் தான் ஆகுதுனு சொன்னாங்க முகத்துல ஒரு பூரிப்பு கூட இல்லையேனு.
யோசனையோடேயே அவனைப் பார்த்துட்டு இருந்தேன் என்னை கவனிச்சவன் முகம் உடனே அப்படி ஒரு சிரிப்புக்கு மாறிடுச்சு.ரொம்ப இயல்பா பக்கத்துல வந்தவன் என்னைப் பத்தின விவரம் எல்லாம் கேட்டுட்டு தோள் தட்டிட்டு போனான்.
எனக்கு ஆச்சரியம் தாங்கல என்னடா இது ஜமீன் குடும்பத்து வாரிசு நம்மகிட்ட இப்படி பேசுறாரேனு நினைச்சேன்.அப்பறம் என்கூட வேலை செஞ்சவங்க எல்லாம் அவனைப் பத்தி அவ்ளோ உயர்வா சொன்னாங்க.
எல்லாம் நேத்து நடந்த மாதிரி அப்படியே மனசுல இருக்கு..அதுக்கப்பறம் பெரியய்யா அவனையும் தியாம்மாவையும் ஒரு மாசத்துக்கு வெளிநாடுக்கு அனுப்பி வச்சுட்டார்.என்ன இருந்தாலும் புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கான தனிப்பட்ட நேரம்னு வேணும் இல்லையா..
சரியா ஒரு மாசம் கழிச்சு வந்தவங்களைப் பார்த்தப்போ பெரியய்யாக்கும் அம்மாக்கும் அப்படி ஒரு சந்தோஷம் ஏன்னா இரண்டு பேரோட முகமும் அவ்ளோ சந்தோஷமா மனமொத்த தம்பதியா இருந்தாங்க.சொன்னா நம்ப மாட்ட வீட்ல வேலை செய்யுற எல்லாருக்கும் எதோ ஒரு பொருள் வாங்கிட்டு வந்துருந்தார்.
சாந்திதேவி அம்மா கூட அவன்கிட்ட சண்டை போட்டாங்க எதுக்கு அண்ணா வேலைகாரங்களுக்கு எல்லாம் வாங்கிட்டு வந்தனு தியாம்மா தான் ஆசைப்பட்டதாகவும் அது மட்டுமில்லாம இவங்க எல்லாருமே நம்மளில் ஒருத்தங்க தான்னு சொல்லி எல்லாத்தையும் அத்தனை சந்தோஷமா கொடுத்தான்.
அதுனாலேயே அவங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிச்சு போக அவங்களுக்கு எது வேணும்னாலும் நான் தான் முதல் ஆளா போய் நின்னு செய்வேன்.அப்படியே வளர்ந்தது தான் எங்க நட்பு.
தியாம்மாவும் என்னை அவங்க கூடப் பிறக்காத அண்ணணாதான் பார்த்தாங்க..இப்படி எல்லாமே நல்லா போய்ட்டு இருந்நது.வீட்ல ஒரு ஒருத்தருக்கா கல்யாணம் ஆச்சு மகிழன் தம்பி பிறந்தான்.அவனை முழுக்க முழுக்க என் கையில போட்டு நான் தான் வளர்த்தேன்.
பெரியய்யாக்கு அவ்ளோ சந்தோஷம் அதை இரட்டிப்பாக்குற மாதிரி வீட்டோட மாப்பிள்ளைங்களே கிடைச்சாங்க..பொண்ணுங்க வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வராம