(Reading time: 12 - 24 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

சிந்தனையிலிருந்து மீட்டிருந்தார்.

என்ன மா எதோ ரொம்ப யோசனையில இருக்குற மாதிரி இருக்கு என்னாச்சு?”

ஹாங்..சாரி நீங்க வந்ததையே பார்க்கல..ஒண்ணும் பெருசா இல்ல அங்கிளை இப்போதான் பார்த்துட்டு வரேன். அவரு பேசினதையே நினைச்சுட்டு வந்ததுல…”

ம்ம் அவரும் நேத்துல இருந்து அதையே தான் சொல்லிட்டு இருக்கார்..ஆனா நான் பார்த்தப்போ அங்க யாருமே இல்ல..வர வர இந்த வீட்ல நடக்குறதெல்லாம் ஒண்ணும் புரிய மாட்டேங்குது.”

அதெப்படி நீங்க அவ்ளோ உறுதியா சொல்றீங்க ணா யாரும் இல்லனு?”

என்னம்மா நீ ஐயா படியில உருள ஆரம்பிச்சப்போ நான் உள்ளே நுழைஞ்சேன் ஒரு வேளை யாராவது நின்னுருந்தா நான் பார்த்துருப்பேன் இல்ல கீழே இறங்கி தான் வெளில ஓடிருக்கனும்..அதுவும் இல்லையா மாடிக்குப் போறதுக்காக மேல் படியில ஓடிருக்கணும்..

இது எதுவுமே இல்லையே மா..தள்ளிவிட்டுட்டு மறைஞ்சு போறதுக்கு ஒண்ணு கடவுளோ இல்ல பேய் பிசாசோவா தான் இருக்கணும்..ஆனா எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை கிடையாது பாப்பா..”

ம்ம் நீங்க சத்தம் கொடுத்த அப்பறம் யாரெல்லாம்ணா வந்தாங்க..அதாவது யாரெல்லாம் வீட்ல இருந்தாங்க?”

கல்யாணியும் இன்னும் ரெண்டு பேரும் சமையல்கட்டுல இருந்து ஓடி வந்தாங்க..கல்யாணி தம்பி தோட்டத்துல இருந்து ஓடிவந்தான்.ஐயாவை தூக்கி இதோ இங்க சோபா தான் படுக்க வச்சோம்.சின்னம்மா இரண்டு பேரும் அங்க உள்ளே பூஜை ரூம்ல இருந்து வந்தாங்க..ஏன் மா கேட்குற?”

இல்ல சும்மா தான்..அப்போ மாடியில இருந்து யாருமே வரல இல்லையா?”

இல்ல மா..”,என்றவரின் பார்வை அவள் முகத்தை ஆராய்வதாய் தோன்ற சட்டென பேச்சை மாற்ற எண்ணியவளாய் சற்றே தாழ்ந்த குரலில் அவரிடம்.

அண்ணா நான் ஒண்ணு கேட்பேன் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”

என்ன மா இப்படியெல்லாம் கேட்குற சொல்லு..”

இல்ல நேத்து ஆன்ட்டி பேய் அது இதுனு சொன்னாங்க அதுவும் மகிழனோட அப்பா..”

அப்படியெல்லாம் சொல்லாத பாப்பா..அவனை மாதிரி தங்கமான மனசு இந்த குடும்பத்துல யாருக்கும் வராது..”

சாரி ணா தப்பா நினைக்காதீங்க..நான் அப்படி எதுவும் நினைக்கல ஆனா அவங்க ஏன் அப்படி சொன்னாங்க..அவரோட இறப்பு யாரும் எதிர் பார்க்காததுனு சொன்னாங்களே..”

ம்ம் இந்த குடும்பத்தோட கருப்பு நாள் அது..அந்த செய்தியை கேட்டு பெரிய்யயாவும் அம்மாவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.