“சாரி நான் உங்ககிட்ட ஒழுங்கா நடந்துகாததுக்காக..அண்ட்…தேங்க்ஸ்…வந்து…இப்போ தான் சூரஜ் கால் பண்ணி விஷயத்தை சொன்னார்..எம்வீ எங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாராம்..”
“ஹா தேட்ஸ் க்ரேட்..ஆனால் இதுல எனக்கு எதுக்கு தேங்க்ஸ்?நியாயமா நீங்க சொல்லிருக்கணும் அதுகுள்ள என் மூலமா தெரிய வேண்டியதா போச்சு..”
“..”
“வேற எதுவும் இல்லைனா நான் உள்ளே போலாமா..பீலிங் டையர்ட்..”
“யா யா நீங்க போங்க..”,என்றவள் நகர்ந்து கொள்ள அதற்கு மேல் பேச்சை வளர்த்தால் இவள்புறம் என்னென்ன கேள்விகள் வருமோ என்ற நினைப்பிலேயே அங்கிருந்து உள்ளே சென்றுவிட்டாள் ஷியாமா.
தனதறைக்கு வந்தவள் தன் டைரியில் குறிப்புகள் வைத்திருந்த பக்கத்தை திறந்து வைத்து பேனாவை எடுத்தவள் மூன்றாவதாய் எழுதியிருந்த அன்நோன்/சூரஜ் என்ற பெயரை அடித்திருந்தாள்.
அதற்கு முன்னதாய் இரண்டாவதாய் இருந்த கல்யாணியின் தம்பி என்ற எழுத்துக்களும் அடிக்கப்பட்டிருந்தன.முதலாவதாய் இருந்த குறிப்பைப் பார்த்தவள் ஆழ்மூச்செடுத்து தலையை இடவலமாய் அசைத்தவாறே அதை மூடி வைத்துவிட்டு கட்டிலில் விழுந்திருந்தாள்.
தொடரும்...