தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 11 - ஸ்ரீ
இரு தினங்களில் சூரஜ் தரப்பில் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு மகிழனிடம் பேசியிருந்தனர்.மகிழன் விஷயத்தை வீட்டில் அனைவரிடமும் கூற சாந்திதேவியும் சர்வேஷும் கொந்தளித்து விட்டிருந்தனர்.
“என்ன பேசுறனு புரிஞ்சுதான் பேசுறியா நீ?நம்ம ஸ்டேடஸ் என்ன அவங்க தகுதி என்ன?”
“நம்மை விட எந்த விதத்துலயும் குறைஞ்சவங்க இல்ல..சும்மா எதோ பேசணுமேனு உளறாதீங்க..”
“யாருடா உளறிட்டு இருக்குறது??நீயா அவரா??உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவெடுத்துருக்குற பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு வந்துருக்கேன்னு சொல்றியே புத்தி மழுங்கிடுச்சா உனக்கு?”
“ஹரே யார்!!!அத்தை கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க..எனக்கு தியாவை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணது நீங்க மட்டும் தான்.நானோ தியாவோ என்னைக்காவது அதுக்கு சம்மதமா பேசிருக்கோமா…நீங்களா கற்பனைக் கோட்டை கட்டினா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?!”
“இவ்ளோ பேசுறவன் கல்யாண பேச்சு எடுத்தப்போ எல்லாம் ஏன் அமைதியா இருந்த?!இப்போ எல்லாம் உன் இஷ்டம்ங்கிற திமிர்ல இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க..அப்போ உன்னையே நினைச்சுட்டு இருந்த என் பொண்ணு நிலைமையை பத்தி யோசிச்சியா?”
“போதும் அத்தை தேவையில்லாத வாதம் வேண்டாம்.புரியாத மாதிரி நடிக்குறவங்களுக்கு புரிய வைக்கவே முடியாது.இந்த கல்யாணம் நடக்கும் என் தரப்பில் எல்லாத்தையும் விசாரிச்சுட்டேன்.அது மட்டுயில்லாம..”,என்றவனின் நொடிப் பொழுது பார்வை தியாவைத் தீண்டி நகர பின் நிதானமாய் சர்வேஷைப் பார்த்து,
“அதுமட்டுமில்லாம சூரஜ்க்கும் தியாவுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுருக்கு..அவங்க ரெண்டு பேரும் காதலிக்குறாங்க..”
அப்பட்டமான அதிர்ச்சி பெரியவர்கள் அனைவருக்கும்.சர்வேஷ் முகமோ ரத்தமென சிவந்திருக்க சாந்தி தேவியோ அவளை அடிக்கவேச் சென்றுவிட்டார்.தியாவின் அருகில் நின்றிருந்த ஷியாமா சட்டென அவளைத் தன்புறம் இழுத்து நிறுத்தியிருந்தாள்.
“இதோ இவ வந்த நேரம் தான் எல்லாம் தப்பு தப்பா நடந்துட்டு இருக்கு..எங்க வீட்டு பையனை எங்களுக்கு எதிராவே திருப்பிட்டா..”
“அம்மா ஆத்திரத்துல என்ன பேசுறோம்னு தெரியாம பேசாத..”
“நீ வாயை மூடு டீ..என் பொண்ணே கிடையாது…இந்த வர்மா குடும்பத்து ரத்தமா ஓடுது உனக்குள்ள..ச்சச்ச..”