“இப்போ எதுக்கு இவ்ளோ இமோஷனல் ஆகுறீங்க…அவங்க லைப் அவங்களுக்கு பிடிச்சா மாதிரி வழ்ந்துட்டு போட்டுமே..”,என்று ஷியாமா முடித்தது தான் தாமதம் வேகமாய் அவளருகில் வந்தவரின் விழிகளில் அப்படியாய் ஒரு குரோதம் இருந்தது.ஒன்றும் பேசாமல் தியாவை அங்கிருந்து இழுத்துச் செல்ல சாந்திதேவி பின்னே சென்றார்.
“விடு கண்ணா அவங்களைப் பத்தி தான் நமக்குத் தெரியுமே..நீ எதையும் மனசுக்கு எடுத்துக்காத..”
“இல்லை சித்தி அதெல்லாம் ஒண்ணுமில்ல..பாவம் தியாவை தான் ஒரு வழி ஆக்குவாங்க..”
“ம்ம் கொஞ்ச நேரம் பொறுத்து நான் போய் பேசிக்குறேன்..நீ போய் ரிலாக்ஸ் ஆய்ட்டு வா டின்னர் எடுத்து வைக்குறேன்..”
“ம்ம்ம்”,என்றவன் அங்கிருந்து நகர்ந்துவிட ஷியாமாவின் அருகில் வாந்த பாயல்,
“நீயும் எதுவும் தப்பா எடுத்துக்காத டா..”
“நத்திங் ஆன்ட்டி..நீங்க போங்க போய் சாப்டுங்க..”
அவர் அங்கிருந்து நகர்ந்தபின் ஆஷிக் நமட்டு சிரிப்பு சிரித்தவாறே அங்கு நின்றிருக்க மோனிஷாவும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“வாட்???”
“தியாக்கு வில்லினு ப்ருவ் பண்ணிட்டே இருக்கீங்களே..”
“அடப்பாவமே ஒரு காதலை சேர்த்து வைக்க முயற்சி பண்ணா இப்படி சொல்லுதே இந்த உலகம்..”
“ம்ம் ம்ம் நம்பிட்டோம்..உங்க ரூட் க்ளியர் ஆயிடுச்சு..என்ஜாய்..”
“ஆனாலும் மோனி உன் அண்ணனுக்கு வாய் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு..பார்த்து எங்கேயும் அடி வாங்காம வந்தா சரி தான்..”,என்றவள் அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தாள்.
தனதறைக்குள் சென்றவள் சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணியவளாய் அங்கிருந்த திவானில் அமர ஏதோ ஒருவித சோர்வோடே இருப்பதை போலவே தோன்றியது.என்ன செய்து மனதை திசைத் திருப்ப என்று யோசித்து சற்று நேரம் வெளி வராண்டாவில் நடந்து வரலாம் என்று எண்ணி கதவைத் திறக்க அதே நேரம் கதவைத் தட்டுவதற்காக மகிழன் கையை நீட்டி நின்றிருந்தான்.
“ஹே ஹாய் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..”
“உன்கிட்ட பேசலாம்னுதான் வந்தேன்..”
“கம் உள்ளே வாங்க..ப்ளீஸ் டேக் யுவர் சீட்..”
“நாளைக்கு நான் பிஸினஸ் விஷயமா தமிழ்நாடு போறேன்..4-5 டேஸ் ஆகலாம்..”