“உறுதிப்படுத்தாம எதையும் சொல்ல விரும்பல..ஆனாலும் உங்களைச் சுத்தி உங்களுக்கேத் தெரியாம பல விஷயங்கள் ஒண்ணோட ஒண்ணு பின்னப்பட்டுருக்குனு தான் தோணுது..யாரையும் நம்பாதீங்க..அவ்வளவு தான் என்னால இப்போதைக்கு சொல்ல முடியும்..”
“நிஜமாவே ரொம்ப குழப்பமா இருக்கு..நம்பிக்கைனு பெருசா யார் மேலயும் இல்லை தான்.ஆனா இந்த வர்மா சாம்ராஜ்யம் துரோகத்தால வீழ்ந்துருமோனு தோணுது..”
“இதுக்கு என்ன சொல்றதுனு எனக்குத் தெரியல..பட் பார்க்கலாம்..விஷயம் இன்னும் கையை மீறிப் போகலனுதான் தோணுது..போய்ட்டு நிம்மதியா தூங்குங்க…எல்லாம் நல்லதா நடக்கும்..”
“தேங்க் யூ..நீயும் போய் தூங்கு..இனி யாரும் இல்லனு நினைக்க வேண்டாம்..ஒரு பப்ரெண்டா எப்பவுமே நான் இருப்பேன்..இட்ஸ் அ ப்ராமிஸ்..”,என்றவன் அவளைப் பார்க்க ஆமோதிப்பாய் புன்னகைத்து அவனோடு உள்ளே சென்றாள்.
தொடரும்...