“ஓ..நானுமே உங்ககிட்ட கேக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்..டூ டேஸ் எங்கேயாவது போய்ட்டு வரேன்..டோடலி ஐ அம் டயர்ட்..இங்கேயே இருந்து..இப் யூ டோண்ட் மைண்ட் நீங்க வர்றதுக்குள்ள நானும் ஒரு சின்ன ட்ரிப் போய்ட்டு வந்துட்றேன்..என்ன சொல்றீங்க?”
“ஒண்ணும் பிரச்சனையில்ல தாராளமா போய்ட்டு வா..பை த வே எங்கனு தெரிஞ்சுக்கலாமா?”
“அது இன்னும் டிசைட் பண்ணல பொதுவா இந்த மாதிரி நேரத்துல என்னோட மென்டர் ஒருத்தர் இருக்கார் பெங்களூர்ல அவரை தான் பார்த்துட்டு வருவேன்..”
“ஓ..”
“என்னாச்சு எதுவும் சொல்ல நினைக்குறீங்களா?”
“நத்திங்..நான் கோயம்புத்தூர் போறேன்..நீ அம்மாவோட நேட்டிவ் பத்தி எல்லாம் என்கிட்ட கேட்டுருந்த இல்ல..அதான் அப்படியே அங்கேயும் போய்ட்டு வரலாமானு தோணிச்சு..நீயும் வந்தா கேஸ்க்கு எதுவும் டீடெயில்ஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?
முதலில் தாத்தாவோட இறப்புல பெரிய சந்தேகம் இல்லாம இருந்தது.ஆனா இப்போ ரொம்பவே சந்தேகம் இருக்கு அதான் எப்படியாவது எதாவது விவரம் கிடைச்சா நல்லாயிருக்குமேனு யோசிக்குறேன்..”
“ம்ம் புரியுது..ஷுவர் போலாம்..கண்டிப்பா எதாவது தகவல் கிடைக்கும்னு நினைக்குறேன்..எத்தனை மணிக்கு ப்ளைட் சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி நான் தயாராக வசதியா இருக்கு…”
“ம்ம் மதியம் ஒரு மணிக்கு ப்ளைட் நாம இங்கிருந்து 12 மணிக்கு கிளம்பினா சரியா இருக்கும்..”
“ஓகே நான் தயாராய்ட்றேன்..அண்ட் டிக்கெட் அமௌண்ட் எவ்வளவுனு சொல்லிட்டா நான் டிரன்ஸ்வர் பண்ணிடுவேன்..”
சற்றே விசித்திரமாய் அவளைப் பார்த்தவன் பின் நிதானமாய்,”நோ வொரிஸ்..நான் மொத்தமா லிஸ்ட் போட்டு தரேன் அப்பறம் கொடு..அவசரமில்ல..குட் நைட்..”,என்று அவன் போக்கில் வெளியே சென்றுவிட்டிருந்தான்.
மறுநாள் காலையில் மோனிஷாவையும் ஆஷிக்கையும் சந்தித்தவள் தன் ஊருக்குச் சென்று வருவதாய் கூறினாள்.அவர்களும் அதைக் கடந்து பெரிதாய் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
மதியம் கூறிய நேரத்திற்கு மகிழன் அவளை ஏர்போர்ட் அழைத்துச் செல்வதற்காக காரை அனுப்பியிருந்தான்.ஏர்போர்ட்டை அடைந்தவள் அவனைத் தேட எண்ணிய நேரம் அவளுக்கு அழைத்தவன் லாங்கில் இருப்பதாய் கூறி உள்ளே அழைத்திருந்தான்.
சிறிது நேரம் அங்கே அமர்ந்திருக்க ப்ளைட் கிளம்புவதற்கு பத்து நிமிடம் முன் வந்து பணிப்பெண்