(Reading time: 9 - 18 minutes)
Kaarigai
Kaarigai

ஆனா பவிகிட்ட நான் சொன்னதும்..." அவன் அவரின் கையின் மேல் தான் கையை வைத்தான்.

"பார்த்துட்டு தான் மா இருந்தேன் " என்றான் சத்யா.

"அது மட்டும் இல்ல சத்யா. இந்த வயசு பொண்ணுகளுக்கு இருக்கற மாதிரி எந்த விதமான ஆசையோ பேச்சுகளோ அவகிட்ட இல்லை. அவ ட்ரெஸ்ஸஸ், அவளுடைய பேச்சு எல்லாத்துலயும் ஒரு முதிர்ச்சி தெரியுது " யோசனையுடன் சொன்னார் லட்சுமி.

"அது தான்மா. அது தான் எனக்கும் அவளை மத்த பொண்ணுங்க கிட்ட இருந்து வித்தியாசமா காட்டுச்சு. அந்த ஆர்வத்துல அவ கிட்ட பேச போயி தான்...ம்ம்ச்ச் அதை விடுங்க. சரிம்மா நான் போயி பிரெஷாயிட்டு வரேன்" என்றவன் எழுந்து செல்ல, "இரண்டு வருடங்களுக்கு முன்பே அவள் இப்படி தான் இருந்திருக்கிறாளா? இல்லை, ஏதோ ஒரு பெரிய பிரச்னையை, இல்லை துன்பத்தை அவள் கடந்து வந்திருக்க வேண்டும். அது தந்த முதிர்ச்சி தான் இது. யாரால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் என்னால் முடியும். இதை போல இருந்தவள் தானே தானும், என்னை மாற்றியது சத்யாவின் அப்பா தானே" ஏதேதோ எண்ணங்கள் முட்டி மோத ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்றார் லட்சுமி "கண்டுபிடிப்போம் அவளின் இறந்த காலம் என்னவென்று. அதில் இருந்து அவளை வெளியே கொண்டு வரவேண்டும்" என்ற முடிவுடன்.

Episode # 04

Episode # 06

தொடரும்

Go to Kaarigai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.