பாட்டிங்களுக்கு என்ன ஆனந்தம்?" என்று ரமா சொல்ல,
அதற்கு சிரித்த நித்யா, "என்னோட பாட்டி அப்படி இல்ல, நான் படிச்சு முடிச்சதும், எங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்னு மாமா சொன்னதுக்கு, முதலில் கல்யாணத்தை முடிங்க, அப்புறம் அதெல்லாம் உங்க விருப்பம்னு சொல்லிட்டாங்க, கல்யாணம் தான் சீக்கிரம் முடிக்க விரும்பினாங்களே தவிர, நான் படிப்பதற்கெல்லாம் தடை போடல, என்னோட அம்மா பயந்ததுக்கே, அவங்க தான் தைரியம் சொன்னாங்க," என்றாள்.
"ம்ம் உங்க பாட்டி சூப்பர், ஆமாம் எந்த ஏரியால இருந்து வர, வீட்டுக்கு போக பஸ்ஸா? இல்ல வண்டியா?"
"இல்ல பஸ்ல தான்," என்றவள் தன் இருப்பிடம் இருக்கும் இடத்தை சொல்ல,
"அப்போ நமக்கு ஒரே பஸ் ரூட் தான், ஒன்னாகவே வீட்டுக்குப் போகலாம், ஈவ்னிங் உனக்காக காத்திருக்கிறேன்." என்று ரமா சொல்லவும், நித்யாவிற்கு மகிழ்ச்சியாக போய்விட்டது.
"நான் எங்கேயும் தனியா போய் பழக்கமேயில்லை, அதனால தான் மாமா வீட்டில் கார் இருந்தும் பஸ்ல தான் போகணும்னு சொல்லிட்டாங்க, எனக்கு அது ஓகே தான், ஆனாலும் முதல்முறை என்பதால் கொஞ்சம் பயமா இருக்கு, நீங்க வரேன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ்," என்று நித்யா சொல்ல,
"இங்கப்பாரு உள்ளதை அப்படியே வெளிய சொல்லக் கூடாது, இதுவே என்னோட இடத்தில் வேற ஒருத்தங்க இருந்தாங்கன்னு வச்சிக்கோயேன், நீ ஒன்னும் தெரியாத அப்பாவி போலன்னு நினைச்சு உன்னை தப்பா யூஸ் செய்துக்க பார்ப்பாங்க, வெறும் விமன்ஸ் காலேஜ் தானேன்னு நினைக்காத, இங்கேயும் ஆபத்தானவங்க இருக்கலாம்," என்று ரமா எச்சரிக்கவும், நித்யாவின் கண்கள் பயத்தை காட்டவும்,
"முதலில் இப்படி தெரியாதவங்க முன்ன வெளிப்படையா பயத்தை காட்டக் கூடாது. அதை அவங்க சாதகமா யூஸ் செய்துப்பாங்க, நான் சொல்றதுக்கெல்லாம் பயம் வருவது சகஜம் தான், ஆனா அதை மனசுக்குள்ள வச்சு வெளிய தைரியமா பேசணும், இப்போ அங்க கூட அவங்க கேலி செய்யவும், ஒருமாதிரி பயமா பார்த்த, அதான் மேலும் உன்னை சீண்டிட்டே இருந்தாங்க, இதுவே தைரியமா ஏதாச்சும் ஒரு பதில் சொல்லியிருந்தா, சரி போன்னு உன்னை விட்ருப்பாங்க, அதுக்காக தான் சொல்றேன்.
ஈவ்னிங் மட்டும் தான் நான் உன்னோட வருவேன். காலையில் நீதானே வரணும், எல்லாத்துக்கும் திகிலா முகத்தை வச்சிருந்த, எல்லாம் சீண்டிப் பார்க்க நினைப்பாங்க, அதனால் வெளிய எப்போதும் தைரியமா இருப்பது போல காட்டிக்க, அதேசமயம் தைரியமா மாறவும் முயற்சி செய்." என்று அவள் பயத்தை தெளிய வைப்பது போல் ரமா பேசினாள்.