ப்ரித்வி இவர்கள் காரை ஓட்டினார் போலே வந்துக் கொண்டிருக்க, செல்வத்திற்கோ அது எல்லாம் எதுவும் தெரியவில்லை. அவனின் வேகம் கண்டு மிரண்ட ப்ரித்வி, கிருத்திகாவை ஓட்டினார் போல் காரைக் கொண்டு வந்தான்.
“கிருத்தி, டோரைத் திறக்க முடியுதாப் பாரு” என்றான்.
கிருத்தி முயற்சி செய்து விட்டு முடியவில்லை என்று தலை ஆட்ட, ப்ரித்வி சட்டென்று அந்தக் காரின் வேகத்தைக் குறைக்கும் வகையில் அதன் டயர் நோக்கி சுட, கார் இங்கும் அங்குமாக ஓடி ஒரு டிவைடர் மேல் முட்டி நின்றது.
இப்போதும் செல்வம் எதுவும் உணராமல், எங்கோ ஓர் உலகத்தில் இருந்தான். ப்ரித்வி டோர் திறக்க முயற்சி செய்ய, திரும்பியவன், சட்டென்று டாஷ் போர்டு திறந்து , கார் டூல்ஸ் பாக்கெட்டில் இருந்து ஸ்க்ரூ டிரைவர் எடுத்தான்.
கிருத்தி என்னவென்று உணர்ந்துத் திரும்பும் முன், அந்த ஸ்க்ரூ டிரைவரால் கழுத்தில் குத்தினான்.
தொடரும்!