(Reading time: 9 - 18 minutes)
Kaarigai
Kaarigai

உள்ளே வா என்று அவனிடம் ஜாடை செய்தவள் பின்னே சென்றான் அவன்.

"அந்த அனாதை கழுதை பெரியமனுஷி ஆயிடுச்சி. பின்னாடி தான் கூரை வேய்ஞ்சு உக்கார வெச்சுருக்கு. இதுக்கு செலவு பண்றது இல்லாம சடங்கு செய்யணுமாம். சும்மா பேருக்கு ஏதாச்சும் செஞ்சு வெக்கலாம். கடைக்கு போயி சாமான் எல்லாம் வாங்கியாரனும்" கண்ணம்மா சொல்ல, தன் தாடையை சொரிந்து கொண்டே ஏதோ ஒரு யோசனையுடன் சரி என்று தலை ஆட்டினான் மாரியப்பன்.

புதிய பாவாடை தாவணியை உடுத்தி தலையில் பூ வைத்து அவள் அம்மா அவளுக்கு சேர்த்து வைத்திருந்த நகைகளில் இருந்து ஒரு ஜோடி கம்மலை மட்டும் எடுத்து கொடுத்திருந்ததால் அதை மட்டும் அணிய வைத்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்திருந்தனர். இத்தனை நாளாக சிறுபெண்ணாக இருந்தவள் பாவாடை தாவணியில் இளம்பெண்ணாக தெரிந்தாள். அவளின் அழகை கண்டு ஒரு நிமிடம் கண்ணம்மாவே அசந்து தான் போனாள்.

"நல்லா தீனி கொடுத்து வளர்த்திருக்கா உங்க அம்மா" அவளின் அழகின் மேல் உண்டான பொறாமையில் முறைத்து கொண்டு நின்றாள் கண்ணம்மா.

"ஐ அக்கா உங்க ட்ரெஸ்ஸு சூப்பரா இருக்கு" என்ன விஷேஷம் என்று தெரியாவிட்டாலும் அன்றைய நட்சத்திரம் அக்கா தான் என தெரிந்ததால் பத்து வயதே ஆன உமா அவள் பின் சுற்றி கொண்டிருந்தாள்.

அக்கம் பக்கம் உள்ளவர் சொன்னதால் புகைப்படம் எடுக்க ஆளை அழைத்து கொண்டு உள்ளே நுழைந்த மாரியப்பன் கண்கள் மின்னியது அங்கு அமர்ந்திருந்த பவித்ராவின் அழகை கண்டு.

அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Episode # 06

Episode # 08

தொடரும்

Go to Kaarigai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.