“அவள் விரும்புவதை நீங்கள் செய்து தருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது ப்ரித்வி.”
“என்றாலும் அவள் விருப்பம் என்ற ஒன்று இருக்கிறது. ஒரு வேளை கொஞ்ச நாள் கமிட்மென்ட் ஏற்படுத்திக் கொள்வதைத் தள்ளிப் போடலாம் இல்லையா?”
“எங்கள் விருப்பம் என்றுக் கூறினால் ஒத்துக் கொள்ளுவாள். மேலும் அவள் எக்ஸாம் முடிந்தப் பின் தான் திருமணம். “
“அத்தனை பிரஷர் அவளுக்குக் கொடுக்க வேண்டுமா?”
“இல்லை ப்ரித்வி. எங்கள் குடும்பத்திற்கு ஒரே பெண் அவள். அவளுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வளர வேண்டும். தற்கால பெண்ணுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள , அவளுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வளர்த்து விட்டேன். ஆனால் அவளின் தைரியத்தையும், விருப்பத்தையும் மதித்து நடக்கும் உங்களைப் போன்றவர் இருக்கும் போது அதை நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்பது தான் எல்லோருக்கும் நல்லது. இதை எடுத்துச் சொன்னால் அவள் புரிந்துக் கொள்ளுவாள்” என்றார்.
ப்ரித்வியைப் பொறுத்தவரை இது நல்ல விஷயம் தான். எனவே சரி என்று ஒத்துக் கொண்டான்.
அவன் வீட்டில் சென்று தன் தாயிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்தான். பின் எதேச்சையாக அவனின் தாய் வழி உறவில் ப்ரித்விக்குப் பெண் கொடுக்க விரும்புவதைப் பற்றிப் பேச்செடுக்கவே தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.
ப்ரித்வியின் பேச்சைக் கேட்டவர்கள், அவனின் அப்பா யார், என்ன என்று கேட்டார். ப்ரித்வி விவரம் கூறவும், அவன் வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷமே.
கிருத்தியின் வீர சாகசங்கள் பற்றி எல்லாம் சொல்லவும் ப்ரித்வி அப்பாவிற்கு அவளின் மேல் அப்படி ஒரு பிடிப்பம் ஏற்பட்டது. பெண்களின் தைரியமும், பாசமுமே ஆண்களின் பலத்திற்குச் சான்று என்ற எண்ணம் கொண்டவர். எனவே கிருத்தியிடம் ஆடோக்ராப் வாங்கும் அளவிற்கு அவளைப் பிடித்துப் போனது அவருக்கு.
ப்ரித்வியின் அம்மா, தங்கை இருவருக்குமே ப்ரித்வியின் விருப்பம் தான் முக்கியம். எனவே அவர்களின் சம்மதமும் எளிதாகக் கிடைத்தது.
கிருத்தியின் எக்ஸாம்ஸ் முடியும் நேரத்தில். அவளின் வீட்டிற்க்கு பிரித்விராஜ் பெண் கேட்டுச் சென்றான். எல்லோரும் சம்மதிக்க வெகு விரைவில் திருமண நாள் நிச்ச்சய்க்கபட்டது.
இருவரின் சொந்த பந்தங்கள், நட்புகள் அனைவரின் வாழ்த்துக்களோடு கிருத்தியின் கரம் பிடித்தான் ப்ரித்வி. திருமணத்திற்காக வளர்த்த ஹோமத்தை ப்ரித்வி, கிருத்தி இருவரும்