(Reading time: 15 - 30 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

பார்க்க, அதில் கிரண் தேவி, இளவரசன் இருவரின் முகமும் சந்தோத்தோடுத் தெரிய, இருவரின் கைகளும் ஒன்று சேர்ந்து இருந்தது.

இதைப் பார்த்த கிருத்தி, ப்ரித்வி இருவருக்கும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

இருவர் கண்களும் லேசாகக் கலங்க, இருவரின் மனத்திலும், கிரண் தேவியாகவும் ப்ரித்வியாகவும் வாழ்வில் இணைய முடியவில்லை. அதனால்  திருமணத்தில் இணையும் இவர்களைப் பார்க்கும் போது இருவரும் தாங்களே இணைந்தது போல் மகிழ்ச்சி அடைகிறார்களோ என்றுத் தோன்றியது.

திருமணம் நல்லபடியாக முடிந்த பின், ப்ரித்வியின் நட்புக்களும், கிருத்தியின் நட்புக்களும் இருவரையும் கேலி,, கிண்டல் செய்துக் கொண்டு இருக்க, அவ்வப்போது கவுன்ட்டர் கொடுத்தாலும், அதை ரசிக்கவும் செய்தார்கள் கிருத்திகா மற்றும் ப்ரித்விராஜ்.

இருவரின் பிரெண்ட்சும்

“ஹனிமூன் எங்கே என்றுக் கேட்க?”

ப்ரித்வியும் கிருத்தியிடம் “ எங்கே போகலாம் ?” என்றுக் கேட்டான்.

கிருத்தியோ “பிகானர் டு பதேபூர் சிகிரி” என்றுக் கூற, மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் முழித்தனர்.

ப்ரிதிவியோ “ஹ. ஹ. மறுபடி முதலில் இருந்தா...?” என்றுக் கேட்டுச் சிரித்தான். அவனோடு இணைந்து கிருத்தியும் சிரிக்க, அவர்களை தூரத்தில் இருந்துப் பார்த்துக் கொண்டு இருந்த கிரண் தேவி, இளவரசன் இருவரின் உருவமில்லா உணர்வுகளும் சிரித்தது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ராணா பிரதாப் சிங்கின் உணர்வுகள் எல்லோருக்கும் ஆசி வழங்கியது.

ஹாய் பிரெண்ட்ஸ்.. போன வருட பொங்கலுக்கு ஆரம்பித்தக் காணாய் கண்ணே இந்த வருடம் பொங்கலுக்குள் முடித்து விட்டேன். இடையில் இருவாரம் தவிர வாரந்தோறும் அப்டேட் கொடுத்து முடித்து விட்டேன். நான் எழுதிய கதைகளில் மிகவும் நீளமான கதை இது. இந்தக் கதையின் கரு என்றால் கிரண் தேவி என்ற ராணி அக்பர் போன்ற மகாவீரரைத் தாக்கியவள் என்ற வரியே. அதை வெறும் சரித்திர காலம் மட்டும் இல்லாது தற்காலத்தோடு இணைந்து பயணம் செய்ய வைத்தேன். எதிர்பார்த்ததை விட ஓரளவு சரியாக செய்து இருக்கிறேன் என்று எண்ணுகிறேன். படித்து விட்டுக் கருத்தக்கள் பகிர்ந்துக் கொள்ளுங்கள். நீங்கள் படிக்கும் போது தோன்றிய முரண்பாடுகள் இருந்தால், கமெண்ட் பாக்ஸ்சில் பகிர்ந்தால் , உரிய விளக்கம் தருகிறேன்

முந்தைய பதிவுகளுக்கு தொடர்ந்து கருத்துக்கள் பகிர்ந்த மதுமதி, ஆதர்வ்ஜோ, பிரியா, ஜெபமலர், சாகி, ஸ்ரீவி.ஆர். அபிமகேஷ் , பிரியா, காந்திமதி , சசி, சாரா, என அனைத்து நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள். விடுபட்டவர்களுக்கும் நன்றிகள். சில்ல்சீ டீம், அண்ட் அட்மின்,  டெக்னிகல் சைட் மக்கள் அனைவருக்கும் நன்றிகள். சக எழுத்தாளர்களுக்கும் நன்றிகள்.

இதற்குப் பின் கொஞ்ச நாள் பிரேக் எடுக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன் பிரெண்ட்ஸ். முடிந்தால் சில்சி ki-mo கண்டெஸ்ட்டில் பங்கு கொள்கிறேன். பிரேக்கிற்கு பிறகு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.

நிறைவுப் பெற்றது!

Episode # 49

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.