"இது...சின்ன வயசுல நானே பண்ணேன், அப்பா ஞாபகமா!" என்றதும் தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு!
"அம்மாக்கிட்ட இது வரைக்கும் சிலமுறைத் தான் அப்பாவைப் பற்றி கேட்டிருப்பேன். அவங்க சொல்லாததில் இருந்தே ஏதோ நடந்திருக்குன்னு புரிந்துக்கிட்டு விட்டுட்டேன். ஆனா...பாசம் இருக்கும்ல அண்ணி! அதான்...!நாளைக்கு 18வது வருடம் மாலை போட போறேன் அவர் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு, அதான்...! அண்ணி..!அம்மாக்கிட்ட இதைச் சொல்லாதீங்க கஷ்டப்படுவாங்க, அண்ணாவுக்கும் தெரிய வேணாம் கோபப்படுவாரு, நமக்குள்ளே இருக்கட்டும் அண்ணி!" கபடமின்றி குழந்தையாய் அவன் உரைக்க கலங்கிவிட்டன அவள் விழிகள்!
"நீ இயற்கையிலே ரொம்ப மென்மையானவன் பார்த்திபா! உனக்குள்ளே எவ்வளவு காயங்களை மறைத்து வைத்திருக்க? சீக்கிரம் அதெல்லாம் குணமாகிவிடும். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். ஒரு விஷயம் புரிந்துக்கோ! நானும், அவரும் உனக்கு இன்னொரு அம்மா அப்பா மாதிரி! அவரும் அதை மறக்க மாட்டாரு, நானும் மாட்டேன்! நிம்மதியாப் போய் தூங்கு! எல்லாமே சரியாகிவிடும்." ஏனோ தன்னை அவன் தாயாய் பாவித்து அவள் உதிர்த்த வார்த்தைகள் உடையான் மனதில் பாலை நிலம் சுரந்த பரந்த ஊற்றாய் உருவெடுத்தது. ஒரு புன்னகையோடு அவன் சென்றவனும் சரி, கண்களைத் துடைத்துக் கொண்டு நகர்ந்தவளும் சரி நிகழ்ந்தவைகளை பலகனியின் மேலிருந்து கவனித்துக் கொண்டிருந்த ஆதித்யாவின் விழிகளைக் காணவே இல்லை!
தொடரும்!
Go to Nenjil thunivirunthaal story main page
{kunena_discuss:1163}