பேசிக்கொண்டே யிருக்கேனே, நீ சாப்பிட்டாயா? சமைக்கட்டுமா? இல்லை, போன் பண்ணி ஓட்டலிருந்து வரவழைக்கட்டுமா? நான் சுத்த சைவம்! இந்தச் சொல்,'சைவம்' என்பதின் மூலம் எது, தெரியுமோ? என் அப்பன், சிவன்! அவனை நினைத்துக்கொண்டே தினமும் சாப்பிடுவேன்......."
" அப்படியா? நீங்க தீவிர சிவபக்தரா? மற்ற கடவுளைவிட அவரென்ன அவ்வளவு உயர்த்தி?"
" என் அப்பன் சிவன்தாம்மா எல்லாமே! அவன் பிம்பங்கள்தான் மற்றவை அனைத்தும்! 'ஏகம் சத்'னு சொல்வது, அவனைத்தாம்மா! அவனுக்குன்னு ஒரு உருவமோ, பெயரோ, இடமோ, எதுவுமே கிடையாது! ஏன்னா, என் அப்பன் சிவனைத்தவிர வேற எதுவுமே இல்லை! அதுதான் 'அ த்வைதம்' அதாவது ரெண்டாவது எதுவும் இல்லை!............"
" போதும், தாத்தா, உங்க சிவபுராணம்! போய் தூங்குங்க! நானும் கொஞ்சம் வெளியிலே போய்ட்டு வரேன்."
பார்வதி ஆண் உருவத்தில் போன இடத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த சிறுகதையில் பார்ப்போமா?
தொடரும்