"ரொம்ப சந்தோஷம்! அப்போ நான் கிளம்புறேன். எனக்கு இந்த நாள் கிழமை எல்லாம் பார்க்கத் தெரியாது, நீங்களே ஒரு நல்ல நாளைப் பார்த்து சொன்னீங்கன்னா, அன்னிக்கே நிச்சயம் பண்ணிடலாம்!" என்றவர் ஒரு வணக்கத்துடன் எழுந்தார்.
"சிவன்யா மாதிரி ஒரு தங்கமானப் பொண்ணை எனக்கு மருமகளா கிடைக்க உண்மையிலே நான் பெருமைப்படணும்!" அவ்வார்த்தையில் உச்சிக்குளிர்ந்துப் போனது தந்தையின் மனம்.
"நான் வரேங்க!" நல்முடிவோடு விடைப்பெற்று நகர்ந்தார் சூர்ய நாராயணன். அவர் சென்றப்பின் உறைந்துப்போய் வெளி வந்த தன் மனைவியைக் கண்டதும் ஏளனமே அவருக்கு வந்தது.
"பார்த்தியா?எவ்வளவு பேசி இருப்ப? அந்தப் பையனை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தினியே...இப்போ என்னாச்சு பார்த்தியா?" என்றவரை இமைக்காமல் பார்த்தார் அவர்.
"என்னங்க...!"
"ஏ...பேசாதே நிறுத்து!" அத்தொனியில் அதிர்ந்துவிட்டார் மீனாட்சி.
"உன்னை ஏன் கல்யாணம் பண்ணினேன்னு இன்னிக்கு வருத்தப்படுறேன். நல்லவேளையா என் பொண்ணுக்கு உன் புத்தி வரலை! கௌரவம், கௌரவம்னு சொன்ன?கௌரவம்...வாழ்க்கையை வாழுறதுல இருக்கு..! உன் வீணாப் போன பெருமையில இல்லை! உன்னைப் பார்க்கக் கூட பிடிக்கலை! யாரும் ஒரு தாய்க்கிட்ட சொல்லாத வார்த்தையை நான் சொல்றேன்...நம்மக் குழந்தை கல்யாணத்துக்கு வரவே வராதே! உன் மூச்சுப்பட்டா கூட அது அவளுக்குப் பாவம்!" என்ற வார்த்தைகள் இப்போதும் மனதினைக் காயப்படுத்தவே செய்தன. எவ்வளவு கடினமான வார்த்தைகள் அவை! எனினும், அவருக்கு அது தேவைத்தான். கர்மம் எப்போதும் தவறிழைப்பவரைத் தண்டிப்பதே இல்லையே என்று வருந்துபவர்கள் என் வார்த்தைகளைக் கேளுங்கள்..! கர்மத்தின் கணக்கு இரகசியமானது..காலத்திற்கு மட்டுமே புலப்பட வல்லது!கர்மம் தவறிழைப்பவர்களைத் தண்டிக்காமல் இருப்பதில்லை. அது தண்டிக்க முதலில் காலம் அவர்களை தன் தவறை உணரும்படியாய் செய்தல் அவசியம்! மனச்சாட்சியின்றி தவறிழைப்பவர்கள் அத்தவறை உணர சில காலங்கள் நிச்சயம் பீடிக்கும். அவ்வாறு காலத்தால் தன் தவறை உணர்ந்து எந்நொடி அவர்கள் தவறிழைத்துவிட்டோமே.! என்று மனம் வருந்துக்கின்றனரோ..அங்குப் பீடிக்கிறது கர்மம்! சாதாரணமாய் உடலில் காயத்தினை ஏற்படுத்துவதற்கும், காயப்பட்டு இரணமான காயத்தில் காயத்தினை ஏற்படுத்துவதற்கும் வித்தியாசம் அதிகம்! இரண்டாம் நிலையில் வலி விவரிக்க இயலாதது...ஓலமிடவும் இயலாத நிலையில் வலியைத் தாங்கும் நிலையது! அதன் வலி எவ்வளவு கொடியது..! கர்மம்