Page 3 of 16
கஷ்டப்படுது... “ என்று வெறுப்புடன் முறைத்தான் பார்த்திபன்..
அதைக் கேட்டு சுபத்ராவுக்கு கஷ்டமாக இருந்தது..
“இந்த ரௌவுடிக்குள்ளயும் ஏதோ ஒரு சோகக் கதை இருக்கும் போல இருக்கே..” என்று எண்ணிக் கொண்டவள்
“சரி... சரி.. மேல சொல்லுங்க.. “ என்று மீண்டும் அவன் கதையை கேட்க ஆரம்பித்தாள்..
அவனும் ஒரு பெருமூச்சை எடுத்து விட்டு தன் கதையை தொடர்ந்தான்..
...
This story is now available on Chillzee KiMo.
...
என் ஆத்தா கொஞ்சம் ரோஷக்காரி.. அவங்ககிட்ட கை நீட்டி காசு வாங்க மாட்டேன் . அவங்க உதவியும் வேண்டாம்னு பிடிவாதமா மறுத்துடுச்சு... அதுவே வயல்ல இறங்கி கூலி வேலை செஞ்சு எங்கள வளர்த்துச்சு..