பவித்ராவை கண்டு அப்போது தான் தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்த லக்ஷ்மிக்கு ஆச்சர்யமும் சந்தோஷமும் ஒருங்கே வந்தது.
"தேங்க்ஸ் பவிம்மா" என்றவர் அவள் கொண்டு வந்த காபியை ஒரு வாய் அருந்திவிட்டு, "வாவ் பவி சூப்பர் காபி...இத்தனை நாள் இந்த காபியை நீ என்கிட்டே இருந்து மறைச்சு வெச்சு அநியாயம் பண்ணிட்டியே" என்றார் லட்சுமி குறும்பாக.
இரவு தன்னுடன் பேசிவிட்டு பழைய நினைவுகளால் லட்சுமி உறங்கவில்லை என்பதை அவருடைய கண்களை பார்த்து புரிந்து கொண்டிருந்தாள் பவித்ரா. ஆனாலும் அவருடைய முகத்தில் கொஞ்சம் கூட கவலையோ சோர்வோ இல்லாததை கண்டு பவித்ராவுக்கு ஆச்சர்யம். தான் இத்தனை வருடங்களாக நடந்ததை எண்ணி தன் மேலே சுய பச்சாதாபம் கொண்டு இருந்திருக்கிறோம் என புரிந்தது பவித்ராவுக்கு.
அதற்குள் தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்த சத்யாவின் கண்களுக்கு ஈர முடியில் தண்ணீர் சொட்ட நெற்றியில் இட்ட விபூதியும் எப்போதும் இருப்பதை விட தெளிவான முகத்துடன் நின்று கொண்டிருந்த பவித்ராவை கண்டு மகிழ்ச்சியும் கேள்வியுமாக கீழே இறங்கி வந்தான்.
சத்யாவை கீழே இறங்கி வருவதை கண்டவள், சமையலறையை நோக்கி சென்றாள். தான் வருவதை கண்டதும் அங்கிருந்து நகர்ந்து செல்பவளை கண்ட சத்யாவின் மனம் சுணங்கி போனது. அவனது முகத்தை கண்ட லட்சுமி புன்னகையுடன் அவனருகே வந்தவர், "குட் மோர்னிங் சத்யா" என்றார்.
"குட் மோர்னிங் மா" என்றவன் அங்கிருந்த சோபாவில் அமர, அதற்குள் சமயலறையில் இருந்து இன்னொரு காபி கோப்பையுடன் வெளியே வந்த பவித்ரா, "இந்தாங்க சத்யா. காபி" என அவனிடம் நீட்ட, சத்யாவுக்கு அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை.
அவனது முகத்தை கண்ட லட்சுமி மனதிற்குள் சிரித்து கொள்ள, பவித்ராவுக்கோ அவனை பார்த்து வருத்தமும் ஆச்சர்யமும் வந்தது.
அவன் அவளின் முடிவுக்காக காத்திருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது. அவளிடம் தெரியும் சிறிய நல்ல மாற்றம் கூட அவனை எந்த அளவிற்கு ஆச்சர்யமும் சந்தோஷமும் படுத்துகிறது. அப்படி என்றால் அவன் எந்த அளவு அவளை நேசிப்பானாயிருக்கும் என்றும் புரிந்தது அவளுக்கு. அவனிடம் என்ன பேச வேண்டும் என்று அவள் முடிவு செய்து விட்டாள். அதன் பின் முடிவெடுக்க வேண்டியது அவன் தான் என்று எண்ணியவன் நீண்ட பெருமூச்சுடன் பார்வையை லட்சுமியிடம் திருப்பினாள்.
"அம்மா இன்னைக்கு புல்லா என் சமையல் தான். என்ன சமைக்கணும்னு சொல்லுங்க. உங்க