அளவுக்கு தெரியாது. இருந்தாலும் சாப்பிடற அளவுக்கு இருக்கும்னு நெனைக்கிறேன்" என்ற பவித்ராவை நடப்பதை எல்லாம் நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தான் சத்யா.
"உன் கைப்பக்குவம் தான் காபிலேயே தெரியுதே...உனக்கு எது இஷ்டமோ அதையே செய் பவித்ரா" என லட்சுமி சொல்லவும் "சரிம்மா" என்றவள் சத்யா குடித்து வைத்திருந்த காபி கோப்பையையும் எடுத்து கொண்டு சமையலறையை நோக்கி செல்ல, சத்யா லக்ஷ்மியை பார்த்தான்.
"அம்மா என்னம்மா ஷாக் மேல ஷாக் கொடுக்கறா.எனக்கு பயமா இருக்கும்மா" என்றவனை முறைத்தார் லட்சுமி.
"என்னடா பயம். அவ கிட்ட தெரியற சேஞ்சஸ் எல்லாம் நல்ல சேஞ்சஸ் தான?" லட்சுமி புரியாமல் கேட்க, "இல்லைம்மா எனக்கென்னவோ அவ ஏதோ ஒரு முடிவெடுத்திருக்கிறானு தோணுது. அதான் எந்த குழப்பமும் இல்லாம தெளிவா இருக்கா. எனக்கு அந்த முடிவு நல்லதா இருக்குமான்னு பயமா இருக்குமா" என்றவனை கண்ட லட்சுமி அவனின் மனம் புரிந்து சிரித்தார்.
"பயப்படாத சத்யா. எல்லாம் நல்லபடியாவே நடக்கும்னு நம்புவோம். அவ அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தா அதை நிச்சயம் நம்மகிட்ட சொல்லுவா. அதுவரைக்கும் பொறுமையா இருக்கறதை தவிர வேற வழியில்லை. சோ அவ சமைக்கறதை சாப்பிட்டு சந்தோசமா இரு." அம்மா சொல்லுவதும் சரி தான் என்று எண்ணிய சத்யா, "சரிம்மா. நீங்க கொஞ்சம் அப்பப்போ கிச்சன்ல போயி பாருங்கம்மா. கையை எதுவும் சுட்டுக்க போறா" எனவும் "அடப்பாவி அவ முடிவே சொல்லல அதுக்குள்ள இவ்ளோ சப்போர்ட்டா...நீ நடந்து மகனே நடத்து" என்றவர் அவனின் தலையை கலைத்து விட்டு எழுந்து சமையலறையை நோக்கி சென்றார்.
"பவிம்மா என்ன இது!!! சமைக்கறேன்னு சொல்லிட்டு ஒரு கல்யாண விருந்தே பண்ணிருக்கே...என்னையும் உள்ள விட மாட்டேன்னு சொல்லிட்டே...தனியா இவ்ளோ பண்ணிருக்கியேடா...ஏன் இவ்ளோ சிரம படர. காலைல இடியாப்பம் தேங்காய்ப்பால்னு செஞ்ச. இப்போ இவ்ளோவா?" டைனிங் டேபிளில் சாம்பார், கார குழம்பு, அவியல், பொரியல், துவையல், ரசம், பாயசம் என பவித்ரா அடுக்கி வைத்திருப்பதை கண்ட லட்சுமி அங்கலாய்த்தார்.
"அம்மா இத்தனை நாள் நான் ஆசையா சமைச்சு சாப்பிட யாருமே இல்லை. இப்போ நீங்க எல்லாம் இருக்கீங்க. இதெல்லாம் என் சந்தோஷத்துக்காக. சோ எதுவும் பேசக்கூடாது. அமைதியா உக்காருங்க" என்றாள் பவித்ரா.
"ஹ்ம்ம் என் வாயை மூடிடு எப்படியாவது. சரி நான் போயி சத்யாவை கூட்டிட்டு வரேன்" என