"நானும் இதுக்கு இன்னும் ரெடியாகலை!"அவள் மனதினைப் படித்தவனாய் பதிலுரைத்தவனை சற்றே நிம்மதியோடு பார்த்தாள் சிவன்யா!
"கொஞ்ச நாள் போகட்டும்! அதுக்கான காலம் தன்னாலே அமையும்!" என்றான் புன்னகையோடு!
"அப்போ அதுவரைக்கும்...?" சட்டென வினா எழுப்பிவிட்டு விட்டத்தினை நோக்கியவளை குறும்போடு நோக்கினான் அசோக்!
"அதுவரைக்கும்..!" என்றப்படி அவள் அருகே அவன் நெருங்க, தடுமாறியப்படி பின்னால் நகர்ந்தவள், சுவரோடு ஒன்றினாள். அவனது மூச்சுக்காற்று அவள் மேல் விழ நின்றிருந்தவன், காதலோடு, அவள் நெற்றியில் மென்மையாகத் தன் இதழினை ஒற்றி எடுக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள் அக்கன்னிகை. தனது அத்தனை ஆண்டு கண்ணியத்தினையும் அவளிடத்தில் சமர்ப்பித்தான் அசோக்!
"குட் நைட்!" இதமான குரலால் அவள் செவியில் உரைத்தவன், விலகிக் கொள்ள..! அங்கே இரு நெஞ்சங்களின் மத்தியில் காதல் ஒன்று மட்டும் தூளி ஆடிக் கொண்டிருந்தது.
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Uyiril kalantha urave story main page
{kunena_discuss:1149}