"இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்"
"பொதுவாக மூலிகை குளியல் எப்போது செய்வார்கள் என்றால் உடம்பில் உள்ள குறிப்பிட்ட செல்கள் என்று அல்லாமல் அனைத்து செல்களையும் சரிசெய்ய வேண்டுமெனில் மூலிகை குளியல் முறையை பயன்படுத்துவார்கள். அதில் நோயாளியை மூழ்க வைப்பார்கள். பொதுவாக ஆயில் மசாஜ் செய்வார்கள். உடல் முழுவதும் எண்ணையை தடவி ஊற விடுவார்கள். அபிக்கு ரொம்பவும் சிக்கலான பிரச்சனை என்பதால் இந்த மாதிரி முழுவதுமாக மூழ்க வைக்கிறார்கள் போல. இந்த முறையில் வெளி உறுப்புகள் பலப்படும்.அபியின் தோலில் ஏற்பட்ட நிறமி கோளாறுகளை இந்த முறையில் சரி செய்ய முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன் மேலும் எலும்பு பலவீனமான எலும்பை உறுதியாக்கும் இந்த முறை பயன்படும் ஏனெனில் தொடர்ந்து நாட்கணக்கில் ஊற விடுவார்கள். அப்படி ஊறும்போது அபிக்கு வெளித் தோற்றத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று நினைக்கிறேன். அப்படி மூழ்கி இருக்கும்போது நோயாளி உறக்கத்தில் இருக்க வைக்கப்படுவார். உணவு கூட தேவைப்படாது. அவர் உடலிற்கு தேவையான சக்தியை அந்த மூலிகை நீரே தந்து விடும்.'
"இப்போது புரிந்து விட்டது"
"சரி… நாம் அவருக்காக ஒரு அறையை தயார் செய்வோம் மேலும் அவருடைய சிகிச்சைக்காக மற்றொரு அறையை தயார் செய்ய வேண்டும். எப்படியாவது ஒரு குளியல் தொட்டியை வாங்கி வந்து இங்கு வைத்து விடுகிறேன். மற்றபடி அவருக்கு என்ன தேவை என்பதை பார்த்து உடனடியாக நாம் தயார் செய்யலாம்"
"ஆங்… அந்த தாத்தாவும் வருகிறாராம்.. அவருக்கும் அறை தயார் செய்ய வேண்டும்."
"நீங்கள் அதை செய்து விடுங்கள். வேறு எதுவும் தேவையா என்று பாருங்கள்"
" நான் தயார் செய்து விடுகிறேன். நீங்கள் சென்று வாருங்கள். நான் அபியுடன் இருக்கிறேன்"
அபியின் அறைக்கு அதிதி செல்லும் முன் கிருபாவை பார்த்து நடந்த