விவரங்களை தெரிவித்தாள்.
" நான் வினயிடம் பேசிக் கொள்கிறேன்' என்று வினயிடம் சென்று எந்தெந்த அறைகளை அவர்களுக்கு ஒதுக்குவது என்று திட்டமிட்டார். மேலும் இந்த விபரங்களை கங்காதரன் இடம் தெரிவித்துவிட்டார். கங்காதரன் சற்று பொறுத்து அங்கு வந்து சந்திப்பதாகச் சொன்னார். அதிரதன் வரவும் அவனிடம் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதிரதனின் தேவைக்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்து முடித்தபின் அன்று இரவு அவரவர் அறையில் உறங்கினர்.
அபியின் அருகில் படுத்திருந்தாள் அதிதி. அவள் மனம் மறுநாள் வரப்போகும் அதிரதனிற்காக காத்திருக்க ஆரம்பித்தது
அப்பொழுது வினய்க்கு கொஞ்சமும் உறக்கம் வரவில்லை. ஏனெனில் அவன் மனதில் புதிதாக கவலை வந்திருந்தது. அது அபியின் கவிதையை படித்த பின் வந்தது. உண்மையில் அபி அந்தக் கவிதையில் என்ன சொல்ல வருகிறாள்..?
அவளுடைய கோபம் நியாயமானதுதான். ஆனால் மென்மையானது அல்ல அழிவுக்கான கோபமாக அவளிடம் இருக்கிறது. அதை அவளும் உணர்ந்து இருக்கிறாள். அவளுடைய மனவலிமை பற்றி அவன் ஏற்கனவே அறிந்திருக்கிறான். அதிரதனையும் அதிதியும் காட்டில் அவள் காப்பாற்றிய விதத்திலிருந்தே அவளுடைய வலிமையை அவன் புரிந்து கொண்டான்.அந்த கோபம் அவளை அழித்து விட கூடாது.
இப்பொழுது அவளுக்கு அன்பும் தேவைப்படுகிறது அதிதியிடமிருந்து தேவைப்படுகிறது. அப்படி என்றால் அதிரதனுக்கும் அதிதிக்கும் இடையில் இடைவெளி வரலாமோ..?. அதனால் அவர்கள் சேர முடியாமல் போய் விடுமோ என்ற கவலை வந்தது. அபி அதிதியை வாழ்க்கை முழுவதுமாக உடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால்...
அவளால் அதிரதனுடன் தன்னுடைய வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள முடியாது. இது ஒரு தவறான முடிவை அல்லவா?. இரண்டு பிரச்சினை யையும் தீர்க்க வேண்டும். இதிலிருந்து அவளை மாற்ற வேண்டுமெனில் அவளுடைய உலகத்தை இன்னும் பெரிதாக வேண்டும். அவளுடைய உலகத்தில் இப்பொழுது க்ருபாவும் அதிதியின் மட்டுமே இருக்கின்றனர்.