குழந்தை…! கைகால்களை உதைத்து அழுதது.
பச்… என்ன செய்றீங்க பூக்காரரே..இந்த குழந்தை அழுகிறதே…!
அதை நீதான் சமாதானப்படுத்த வேண்டும்…!
அச்சோ… எனக்கு குழந்தையுடன் விளையாடத்தான் தெரியும்… சமாதானம் செய்ய முடியாது…!
அது உன்னை சமாதானம் செய்யும்… நீ நீண்ட நாட்களாக தொலைந்து... தனித்து... தவித்து… இழந்த அத்தனையையும் உனக்கு தரும்…!
குறுஞ்சிரிப்புடன் தொடர்ந்தான்… அது என்னையும் உன்னிடம் சேர்க்கும்…. ம்… சேர்த்து வைக்கும்…!
அவனுடைய மூச்சு காற்று அவளுடைய கேசத்தை கலைத்து விளையாட.. அந்த நெருக்கம் மயக்கம் வரவைக்க கூடவே பயமும் வந்தது...
ஆங்… நீங்கள் எனக்கு எதற்கு… அவள் கேள்வியை முடிக்கும் முன் காற்றில் கரைந்து போனான்….
ஓ… அவள் அவனை கை நீட்டி பற்றி இழுக்க… வெறும் கைகள்தான் நீண்டன. ஐயோ.. அந்த குழந்தை எங்கே? திடுக்கிட்டு எழுந்தாள்.
சே… என்ன கனவு… என்று ஆரம்பித்து.. என்னவொரு கனவு என்று சிலாகித்து.. எனக்கு என்னாச்சு என்று சில்லிட்டு உறக்கம் தொடர்ந்தாள். மனம் மட்டும் உறங்காமல் பல மாய வேலைகளை செய்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தது.
பின்னாட்களில் அவை அத்தனையும் ஒவ்வொன்றாக சத்யனிடம் வேஷம் போட்டு அவனை கலைக்க முற்பட்டன...
தொடரும்
Next episode will be published on 16th June. This series is updated weekly on Tuesday evenings.