தமிழ்செல்வி பல்லை கடித்து கொண்டு நின்றாள்.
"போனா போகுதுனு சாரி சொன்னா ரொம்ப தான் பேசறாரு. நாளைக்கு மிளகாய் சாதம் செய்து தந்தா எல்லாம் சரியா போய்டும்" என்று எண்ணியபடி சென்று சோபாவில் சென்று படுத்தாள்.
அவளுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. யார் அவளை எரிச்சல் படுத்தினாலும் அதற்க்கு அவள் பதிளுக்கு பதில் பேசமாட்டாள், ஆனால் ஏன் இவரோடு மட்டும் இப்படி வாயாட தோன்றுகிறது என்று எண்ணியவள் "இவரு ரொம்ப ஓவரா போறாரு...அதான்" என முடிவு செய்து கொண்டாள்.
காலையில் அலாரம் அடித்ததும் எழுந்தவள் வேகமாக குளித்து முடித்து கீழே சமயலறைக்கு ஓடினாள். அவளுக்கு ஒழுங்காக தெரிந்த ஒரே வேலையான காபி செய்யும் வேலையை செய்தவள் அதை ஒரு கப்பில் ஊற்றி மேலே உறங்கி கொண்டிருந்த ராமின் அருகே இருந்த டேபிளில் வைத்தவள், இருவருக்குமாக காலை உணவாக ஓட்ஸ் மற்றும் இரண்டு முட்டை ஆம்லெட்களை தயாரித்தவள் அதை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைக்கவும் ராம் கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது.
அவனுக்கான உணவை அவன் புறம் நகர்த்தியவள் தனக்கானதையும் எடுத்து கொண்டு அமர்ந்தாள்.
"இதாவது குடிக்கிற மாதிரி இருக்குமா?" என்றவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு எழுந்தவள் டைனிங் டேபிளில் இருந்ததை எல்லாம் சுத்தம் செய்து எடுத்து வைத்து விட்டு வந்தாள்.
அவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அன்றைய செய்தி தாளை புரட்டி கொண்டிருக்க, அவன் அருகே வந்து தயங்கி நின்றவளை பார்த்தவன் "ஏதாவது வேணுமா?" என்றான்.
"ஹ்ம்ம்...கொஞ்சம் கடைக்கு போகணும்" என்றாள் தயக்கமாக.
"அதானே பார்த்தேன். என்னடா இன்னும் கேக்கலையேன்னு...எந்த கடைக்கு நகை கடைக்கா? ட்ரெஸ்ஸா? இல்லை ரெண்டுமா? எவ்ளோ பட்ஜெட்???" என்றான் முகத்தில் ஒரு நக்கலான சிரிப்புடன்.
"காய்கறி கடைக்கு...மதியம் கேப்பிங்க தான??? நான் என்ன என் கையை காலை வெட்டியா சமைக்க முடியும்???" என்றாள் தமிழ்செல்வி கோபத்துடன். அவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதை கண்டவன் "அவசரப்பட்டுட்டமோ??" என்று எண்ணினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை போல "இப்போ காய்கறின்னு சொல்லுவ, அதுக்கு அப்பறம் நான் சொன்னதை தான கேட்ப? அதுக்கு தான பெரிய பணக்கார வீட தேடி கண்டுபிடிச்ச???" என மேலும் அவளை சீண்ட, "உங்களை போயி கேட்டேன் பாருங்க...சே....அன்னைக்கு சொன்னதே