பண்ணிக்கோ" ராம் சொல்ல, "உங்களுக்காக...." என அவனை பார்த்து புன்னகைத்தவள் சாப்பிட, அதற்க்கு மேல் சாப்பிட தோன்றாமல் எழுந்த தமிழ், தன்னுடைய தட்டை எடுத்து கொண்டு சமையலறைக்கு சென்றாள்.
அங்கிருந்த பாத்திரங்களை கழுவியவளுக்கு அவர்கள் இருவரையும் பார்க்காமல் மேலே அறைக்கு செல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவர்களை கடந்து தானே சென்றாக வேண்டும் என்று எண்ணியவள் பேசாமல் அங்கேயே சாய்ந்து நிற்க, அவர்களின் பேச்சு சத்தமும் சிரிப்பும் அவளின் காதுகளில் விழுவதை தவிர்க்க முடியவில்லை தமிழால்.
சாய்ந்து நின்றபடியே கண்ணை மூடி நின்று கொண்டிருந்தவள் "நீ சரியா சாப்பிடலையே??? " என்ற குரலில் திடுக்கிட்டு கண்விழிக்க அவளின் எதிரே கையை காட்டியபடி நின்று கொண்டிருந்தான் ராம்.
அவனை கண்டதும் அடுப்பை துடைப்பபது போல அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றவள் "பசிக்கல " என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியே வந்தாள்.
டைனிங் டேபிளை துடைத்து எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு மேலே இருந்த அறையை நோக்கி சென்றாள்.
தலையை வலிப்பது போல இருந்தது. அங்கிருந்த பால்கனி வழியே வெளியே தெரிந்த தோட்டத்தை பார்த்தாள். ராமும் நித்யாவும் ஏதோ பேசியபடி நடந்து கொண்டிருந்தனர். அவள் பார்த்து கொண்டிருக்கையிலேயே அவனின் தோலை பிடித்து தொங்கியபடி அவனின் காதில் ஏதோ சொன்னாள் நித்யா. அதை பார்த்த நொடியில் தமிழுக்கு நித்யாவை எங்கு பார்த்தோம் என நினைவிற்கு வந்தது. அன்று அந்த மாலில் அவனின் கைகோர்த்து போன பெண் இவள் தான் என புரிந்தது தமிழுக்கு.
தொடரும்
Next episode will be published on 25th July. This series is updated weekly on Saturday mornings.