சொல்ல, "ஓகே ராம். என் ரூம் பிரியா தான இருக்கு??? நான் அங்கேயே ஸ்டெ பண்ணிக்கறேன். ஜஸ்ட் வெயிட் பார் மீ. ஐ ஹவ் எ லாட் டு டாக்" என்றுவிட்டு அங்கிருந்து நகர, "டி காபி ஏதாவது ???" என்றாள் தமிழ்.
"எனக்கு டி காபி எல்லாம் பழக்கம் இல்லை" எனவும் "ஓ..." என அங்கிருந்து தமிழ் நகர முற்பட, "ஒரு ஆப்பிள் ஜூஸ் ரெடி பண்ணுனா போதும். நான் பிரெஷ்ஷாயிட்டு வரேன்" என்று விட்டு மேலே நோக்கி செல்ல, "ஆப்பிள் ஜூஸ்சாம் ஆப்பிள் ஜூஸ்" என்று முனகியபடி சமயலறையில் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தவள் பின்னே வந்து நின்றான் ராம்.
"அவ பாரின்ல படிச்சவ" என்றான் அவளுக்கு பின்னால் நின்றபடி.
"அவ வீட்ல ரொம்ப செல்லம்" என்றான் மீண்டும் அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருக்கவும்.
கழுவிய காய்கறிகளை எடுத்து பிரிட்ஜில் வைத்தவள் "அது எல்லாம் எதுக்கு என்கிட்டே சொல்றிங்க? நானும் கொஞ்சனுமா?" என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
"அவளுக்கும் சேர்த்து மதியம் குக் பண்ணனும். நேத்து மாதிரி எதுவும் பண்ணிடாத. அதுக்கு தான் சொன்னேன்" என்ற ராம் அங்கிருந்து நகர, அவனை திரும்பி முறைத்தவள் "பெரிய இளவரசி டயானா.... ஆனா இவளை எங்கயோ பார்த்துருக்கறனே...எங்கே???? " என யோசித்தவள் எதுவும் ஞாபகம் வராமல் போகவும் "இங்க பார்த்ததே கடுப்பா இருக்கு இனி எங்க பார்த்தா என்ன???" என்று எண்ணியபடி மதிய சமலையலுக்கு அம்மாவிடம் ரெசிபி கேட்கலாம் என கலைவாணிக்கு அழைத்தாள்.
"சொல்லுடா தமிழ். எப்படி இருக்க? மாப்பிளை எப்படி இருக்காரு?" - கலைவாணி
"அம்மா எல்லாரும் நல்லாருக்கோம். இங்க ஒரு கெஸ்ட் வந்துருக்காங்க. அவங்களுக்கு சேர்த்து இன்னைக்கு நான் தான் சமைக்கறேன். " - தமிழ்
"நீயா? உனக்கு சமையலே வராதே!!!" - கலைவாணி.
"அம்மா பாக்கியம் அம்மா இல்லை. ஏதாவது டேஸ்டியா அதேசமயம் சிம்பிளா இருக்கற ரெசிபி சொல்லுங்க " - தமிழ்
அவரிடம் ரெசிபி வாங்கியவள் அதை எல்லாம் சமைத்து முடிக்க கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் ஆனது.
"அப்பாடா...பாக்கவே அழகா இருக்கு...ஹம்ம்கூம்...நேத்து கூட நல்லா கலர்புல்லா அழகா தான் இருந்துச்சு. ஆனா டேஸ்ட் மோசமா இருந்துச்சே...சே சே...அது யு டியூப் ரெசிபி. இது அம்மா ரெசிபி. கண்டிப்பா நல்லா தான் இருக்கும்" அங்கிருந்த ஒவ்வொரு பதார்த்தத்தையும் ருசி