பார்த்தவள் "அய்யயோ இறால் உப்பு கொஞ்சம் அதிகமா இருக்கே?" என ஒரு நிமிடம் விழித்தவள் கலைவாணிக்கு அழைத்தாள்.
அவரிடம் பேசியவள் அதில் கொஞ்சம் எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டாள்.
"இங்க ஒருத்தி ரெண்டு மணி நேரமா சமைச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு கர்ட்டஸிக்காகவாச்சும் ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்டுச்சுகளா..." என்று தனக்கு தானே முனகியவள் சமயலறையில் இருந்து வெளியே வந்து பார்த்தாள்.
"எங்க போனாங்க???" என்று யோசித்த்தவள் மேலே இருந்து சிரிப்பு சத்தம் கேட்கவும் படிக்கட்டில் ஏறினாள்.
ராமும் நீத்து எனும் நித்யாவும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடி கேம் விளையாடி கொண்டிருந்தனர்.
"லன்ச் ரெடி" என்றாள் தமிழ் அவர்களின் அருகே சென்று.
"வா நித்து " ராம் அழைக்க, "ராம் ப்ளீஸ் ப்ளீஸ் இன்னும் ஒரே ஒரு ரவுண்டு" என அவள் அவன் கையை பிடித்து கொஞ்சினாளா கெஞ்சினாளா என தெரியவில்லை தமிழுக்கு. அதை கண்டவளுக்கு எரிச்சல் வர அங்கிருந்து நகர்ந்து தங்களின் அறைக்கு வந்தவள் பாத்ரூமில் நுழைந்து அந்த எரிச்சல் அடங்கும் வரை குளித்து விட்டு உடை மாற்றி கொண்டு வெளியே வர, இருவரும் அங்கு இல்லை. கீழே இறங்கியவளுக்கு இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருப்பதை கண்டவள் முகம் அவளையும் அறியாமலேயே சுருங்கியது.
நித்யா ராமுக்கு பரிமாறி கொண்டிருக்க, அங்கே சென்ற தமிழ் "நீங்க உக்காருங்க நான் பரிமாறறேன்" என நித்யாவின் கையில் இருந்த பாத்திரத்தை வாங்க கையை நீட்ட, "எங்களுக்கு வேணும்ங்கறதை நாங்க எடுத்துட்டோம். உங்களுக்கு எடுத்துக்கோங்க" என அந்த பாத்திரத்தை டேபிளின் மேல் வைத்து விட்டு ராமின் அருகே உட்கார, தமிழின் மனம் அவளுக்கே தெரியாமல் வாடிப்போனது. அது அவளின் முகத்திலும் தெரிந்தது.
அங்கிருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்த தமிழ் பேருக்கு ஏதோ கொஞ்சமாக சாப்பாட்டை எடுத்து தன்னுடைய தட்டில் வைத்தவள் அதை உண்ண முடியாமல் மனம் அலைபாய்ந்தது.
"எதற்க்காக இப்படி மனம் வருந்துகிறது? அவள் ஒன்றும் சந்தோசமான அன்யோன்யமான வாழ்க்கையை எதிர்பார்க்கவில்லை தானே ஆனாலும் ஏன் இப்படி ஒரு வெறுமையான உணர்வு???" என அவள் மனம் புழுங்கி கொண்டிருக்க, "எல்லா டிஷஷும் ரொம்ப ஆயிலியா இருக்கு...நான் டயட்ல இருக்கேன்...எப்படி ராம் இதெல்லாம் சாப்பிடறது???" என மீண்டும் கொஞ்சினாள் நித்யா.
"நாளைக்கு உனக்கு புடிச்ச மாதிரி செய்துடலாம் நித்து. இன்னைக்கு கொஞ்சம் அடஜஸ்ட்