தான் இன்னைக்கு சொல்றேன். உங்க மென்டாலிட்டி ரொம்ப சீப்பா இருக்கு. மாத்திக்கங்க" என்றவள் பையையும் எடுத்து கொண்டு வேகமாக வெளியே சென்றாள்.
ராம் அந்த சூப்பர் மார்க்கெட்டின் ஒரு ஓரத்தில் காரை நிறுத்தவும் தமிழ்செல்வி இறங்கி வேகமாக அந்த கடைக்குள் நுழைய , ராம் அவளை பின் தொடர்ந்தான்.
ராம் மெதுவாக வேடிக்கை பார்த்தபடி வர, தமிழ்செல்வி அவளுடைய லிஸ்டில் இருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்த படி அங்கிருந்த இன்னொரு பகுதிக்குள் நுழையவும் அசோக் அங்கிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
"ஹலோ அசோக் எப்படி இருக்கீங்க?" திருமணம் பற்றி பேசிய பின் அவனோடு பேசும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை. திருமணத்தன்று கூட ஒரு புன்னகையோடு விடை பெற்றுக்கொண்டான். அங்கே அவனை எதிர்பாராத விதமாக சந்தித்ததும் சந்தோசத்துடன் அவனருகே ஓடினாள் தமிழ்செல்வி.
"ஹேய் தமிழ், எப்படி இருக்க?"அவளை கண்டதும் அவன் முகமும் மலர்ந்தது.
இருவரும் அங்கே நின்று பேசி கொண்டிருக்க, அதுவரை ஒவ்வொரு பகுதியாக வேடிக்கை பார்த்தபடி வந்த ராம், அந்த பகுதிக்குள் நுழையவும் அவர்கள் இருவரும் பேசுவதை கண்டவன் முகம் இறுகியது.
"பாட்டி ஊருக்கு போயிருக்காங்க. ஒரு வாரம் ஆகும்னு சொன்னாங்க வர. நீங்க ஒரு நாள் லஞ்சுக்கு வாங்க அசோக்" அவனுடன் பேசிக்கொண்டிருந்தவள் ராமை கண்டதும் அமைதி ஆனாள்.
அவனை திரும்பி பார்த்த அசோக், "பாட்டி வந்ததும் வரேன் தமிழ். சரி தமிழ். ஏதோ பர்ச்சேஸ் பண்ண வந்திருப்ப போல.நீ கன்டினியூ பண்ணு" எனவும் அவனிடம் தலையசைத்து விடைபெற்றவள் அந்த புறமாக நகர, அசோக்கின் அருகே வந்தான் ராம்.
"ஹாய் ராம், எப்படி இருக்க" அவனை பார்த்து புன்னகையுடன் கேட்டவனை பார்த்தவன், "உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு நெனைச்சிருந்தேன். இங்க பார்த்ததும் நல்லது தான்" என்றான் ராம்.
"என்கிட்டயா? என்ன விஷயம்?" அசோக் ஆச்சர்யமாக கேட்க, "இனிமேல் உன் ஹாஸ்பிடல்ல வேலை விஷயமா தமிழ் கிட்ட பேசக்கூடாது. எனக்கு அது பிடிக்கல" என்றவன் அசோக்கின் பதிலுக்கு நிற்காமல் இரண்டெட்டு எடுத்து வைத்தவன் "எனிவெ காங்கிராஜுலேஷன் பார் யுவர் நியூ ஹாஸ்பிடல்" என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான். செல்லும் அவனையே புன்னகையுடன் பார்த்தான் அசோக்.
வீடு வந்து சேரும் வரை அந்த காருக்குள் அப்படி ஒரு நிசப்தம். வரும்போதும் அப்படி தான்