(Reading time: 18 - 35 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

மகள் குணவதியாக இருக்கிறாள் என்று பெருமிதப்பட்டாள்.

சுகன்யாவின் குடும்பத்தாருக்கும் நம்பத்தான் முடியவில்லை. சுகன்யாவை வழக்கம்போல் அழைப்பதற்கு கார் வீட்டு வாசலில் சென்று நிற்கவும் அவர்கள் திகைத்தனர்.

சுகன்யாவின் தாய் மரகத்திற்கும், அக்கா செல்விக்கும் அவர்கள் உணவு விடுதியிலேயே வேலை போட்டுக் கொடுத்தனர்.

"அம்மா. நம்ம வீட்டில் இனி நல்லா சமைக்கனும்மா. அப்பா ஒழுங்கா சாப்பிடாமல் இருந்ததால்தான் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் நம்மை விட்டுப்போய்விட்டார். நாம உயிர் வாழறதே இந்த வயிற்றுக்காகத்தானே."

கண்ணீருடன் மகள் பேசியதில் உள்ள உண்மை மரகதத்திற்கும் புரிந்தது.

சுகன்யா மகாலட்சுமியுடனே தொடர்ந்து படித்தாள். மகாலட்சுமி அவளை வாடி போடி என்றழைத்தாலும் இதுநாள்வரை மகாலட்சுமி குறைபட்டுக்கொண்டு கூட சுகன்யா தன் நிலைமையை மறந்து அவளிடம் அதிகமாய் உரிமை எடுத்துக் கொண்டதில்லை.

மகாலட்சுமி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க சுகன்யாவும் அந்த படிப்பிலேயே சேர்ந்தாள்.

மகாலட்சுமியின் குடும்பத்தொழில் உணவு சம்பந்தப்பட்டது. அது அவள் இரத்தத்திலேயே ஊறியிருந்தது. அத்துடன் அவளை தங்கள் குலதெய்வமாகக் கருதும்  கந்தசாமி ஏற்கனவே அவள் பெயரில் ஒரு நட்சத்திர உணவு விடுதியை எழுதி வைத்திருந்தார். இதுநாள் வரை அதன் வருமானம் மகாலட்சுமியின் பெயரில்தான் இருக்கிறது. அதை அவள் எப்போது வேண்டுமானாலும் எடுத்து செலவு செய்யலாம். யாரும் கணக்கு கேட்கமாட்டார்கள். ஆனாலும் தாயின் வழிகாட்டுதலில் வளர்ந்ததால் அநாவசிய செலவுகளை அவள் இதுவரைக்கும் செய்ததில்லை.

அதனால் மகாலட்சுமி அந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தது ஆச்சர்யமில்லை. ஆனால் சுகன்யா விருப்பத்துடன் அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தாள்.

இளநிலைக் கல்வியுடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லலாம் என்றிருந்தவளிடம் வளர்மதி தன் மகளுடன் சென்று தங்கியிருக்கக் கேட்டாள். அவர்கள் இல்லை என்றால் தங்கள் குடும்பம் இல்லை. இப்போது வளர்மதி அவளை சும்மா தன் மகளுக்குத் துணையாக இருக்கக் கூறவில்லை. அவளையும் மேல்படிப்பில் சேர்த்துவிடுவதாகக் கூறினாள்.

அவள் நேசிக்கும் படிப்பு, அவள் மீது கலப்படமற்ற அன்பு காட்டும் தோழியின் அருகில் இருப்பதற்கான வாய்ப்பு. கசக்குமா அவளுக்கு. வீட்டினர் அனுமதியுடன் தோழியுடன் வந்துவிட்டாள். இதோ இன்னும் சில நாட்களில் படிப்பு முடியப்போகிறது. மகாலட்சுமியின் உணவு விடுதியிலேயே வேலை பார்த்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

தன்னை நம்பி வளர்மதி மகாலட்சுமியை அனுப்பியிருப்பதால் இன்று வரை அவளை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.