Page 10 of 10
"கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரின்னு சொல்வாங்க. அது மாதிரி. சேச்சே. இவனைப் போய் தெய்வத்தோட ஒப்பிடலாமா? சாத்தானை நினைச்சா அது வந்து நிற்கும்பாங்க. அதுதான் இவனுக்குப் பொருத்தமா இருக்கு." அவள் மனதில் ஓடியது அவனுக்குப் புரிந்திருக்குமா? அவன் இதழ் வளைவில் இகழ்ச்சியான புன்னகை.
"லட்சுமி. என்ன பண்றே? பந்தைத் தூக்கிப்போடு." தோழியின் குரலில் அருகில் பார்த்தாள். அதற்குள் அவன் மறைந்திருந்தான்.
ஒருவேளை அவன் வந்ததே கனவோ?
அவள் உடலில் அவன் விரல்கள் பதிந்த இடத்தில் இன்னும் அழுத்தத்தை உணர்ந்தாள்.
அவன் சாத்தானா? தெய்வமா?
வளரும்............