அவளை பார்த்து சிரித்தாள் இலக்கியா.
"உங்க காம்ப்ளிமெண்ட்ஸ்க்கு ரொம்ப தேங்க்ஸ். ஐ திங்க் நாங்க உள்ள பேசுவதை நீங்க கேட்ருக்கீங்கனு நெனைக்கிறேன். எனக்கும் தமிழ்செல்விக்கும் இடையில பிரச்சனை இருக்கு தான். பாட்டிக்கு என்னை விட அவளை தான் ரொம்ப பிடிக்கும். இதெல்லாம் உண்மை தான். ஆனா எனக்கும் அவளுக்கும் இருக்கற பிரச்சனை எங்க பெர்சனல். அதை பத்தி நீங்க பேசறது எனக்கு பிடிக்கல. உங்க இன்டென்ஸன் என்னனு எனக்கு தெரியாது. ஆனா அதுக்கு என்னை உங்ககூட கூட்டு சேர்க்க நெனைக்காதிங்க" நித்யாவை கடந்து சென்றவள் "அப்பறம் இன்னொரு விஷயம்...மத்தவங்க பேசறதை ஒட்டு கேக்கறது அவ்ளோ நல்ல பழக்கம் இல்லை" என்றவள் அவளின் அறைக்கு செல்ல, கோபத்தில் நித்யாவின் முகம் சிவந்தது.
தமிழ்செல்விக்கு முற்றிலும் வேறாக இலக்கியா இருப்பாள் என நித்யா எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் அவளின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் யாருக்கும் பயபடாமல் கத்தி போல பாய்ந்தது. அவளுக்கு தமிழை பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து அவளை தன் வசம் இழுக்க எண்ணி தான் பேசினாள். ஆனால் இலக்கியாவை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது அவளுக்கு.
அறைக்குள் நுழைந்த இலக்கியா டொக்கென வைத்தால் கையில் இருந்த ட்ரேயை. அந்த சத்தத்தில் எழுந்து அமர்ந்தான் பரத். காலையிலேயே பத்ரகாளி போல நின்றிருந்த இலக்கியாவை கண்ட பரத், "என்ன பிரச்சனையோ" என்ற பீதியிலேயே எழுந்து அமர்ந்தான்.
"இலக்கி...இலக்கி குட்டி....என்னாச்சுடா?? காலைலயே என் செல்லம் கோபமா இருக்கு?" அவளின் விரல்களில் சொடக்கெடுத்தபடி கேட்டான்.
"ஹ்ம்ம்...கோபமா??? எனக்கு இருக்கற கடுப்புல அப்படியே...."என பல்லை கடித்தவள், "உனக்கு அத்தை பொண்ணு இருக்குனு நீ எங்கிட்ட சொல்லவே இல்லைல இவ்ளோ நாளா???" என பரத்தின் காதை பிடித்து திருகினாள்.
"அத்தை பொண்ணா....நித்யாவா??? அது...முக்கியமான விஷயம் இல்லையேன்னு தான் சொல்லல இலக்கியா....என் எண்ணமெல்லாம் நீ தான இருந்த...அப்பறம் எப்படி எனக்கு இன்னொரு பொண்ணோட ஞாபகம் வரும்????" வலியில் முனகியபடி சொன்னான் பரத்.
"ஹ்ம்ம்...பொழைச்சு போ" என அவன் காதை விட்டவள் "எனக்கு உன் அத்தை பொண்ணை பிடிக்கவே இல்லை. அவளும் அவ பேச்சும்...என்கிட்டே இன்னொரு முறை அவ வந்து பேசுனானு வெச்சுக்கோ நீ தொலைஞ்ச மவனே" என இலக்கியா விரலை நீட்டி மிரட்ட, "சரிடி என் பொண்டாட்டி" என அவளை இழுத்து மடியில் போட்டான்.