காபி கலந்து எடுத்து கொண்டு சமயலறையில் இருந்து வெளியே வந்த தமிழ்செல்வி, நித்யா சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டதும் அவளருகே சென்றாள்.
"நித்யா காபி??" என அவளிடம் ட்ரேயை நீட்ட, அவளை நிமிர்ந்து பார்த்தவள் "நான் டி காபி சாப்பிட மாட்டேன்னு ஏற்கனவே சொல்லிருக்கேன்னு நெனைக்கிறேன்" எனவும் "ஓகே" என தோள்களை குலுக்கியவள் மேலே செல்ல, அவள் ராம்க்கு காபி கொண்டு செல்வதை கண்ட நித்யா மெல்ல எழுந்து அவள் பின்னேயே சென்றாள்.
அறைக்குள் நுழைந்த தமிழ்செல்வி, எப்போதும் போல அவனுக்கான காபியை அங்கிருந்த டேபிளில் வைத்தவள் அங்கிருந்த இன்னொரு அறைக்குள் நுழைய, அதை வெளியே இருந்து பார்த்து கொண்டிருந்தாள் நித்யா.
"பரத், உனக்கு இந்த செமெஸ்டரோட எம்பிஏ முடியுது இல்லையா???" ராம் கேட்க, "ஆமாம் அண்ணா. அஸ் பார்ட் ஆப் லாஸ்ட் செமஸ்டர், நான் நம்ம கம்பெனில தான் ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருக்கேன். நான் ரிப்போர்ட்ஸ் கூட உனக்கு அனுப்பிருந்தனே..." பரத் சொல்லவும், "ஹ்ம்ம் ஆமாம். நான் ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டேன். அதுல சில கரெக்ஷன்ஸ் இருக்கு. அதெல்லாம் உனக்கு மெயில் பண்ணிடறேன். இப்போ நான் எதுக்காக இதை கேட்டனா, இப்போ நீ நம்ம மேனுபாக்சரிங் யூனிட்ல தான் ப்ராஜெக்ட் பண்ற. சோ நீ ஏன் அங்கேயே ஜெனரல் மனேஜரா கன்டினியூ பண்ண கூடாது? இப்போ நம்ம கரண்ட் ஜிஎம் ரிட்டைர்ட் ஆகா போறாரு. சோ எனக்கு உன்னை அவருக்கு ரீபிளேஸ்மெண்ட்டா எடுக்கலாம்னு தோணுது. நீ என்ன சொல்ற? பாட்டி உங்க அபிப்ராயம் என்ன??" ராம் கேட்கவும் இலக்கியா முகம் பூரித்து போனது. அவள் ஆர்வமாக பரத்தின் முகத்தை பார்த்தாள்.
"அண்ணா எனக்கு ப்ரொபெஷனல் எக்ஸ்பீரியன்ஸ் எதுவும் இல்ல...அங்க ப்ராஜெக்ட் பண்ணுனதால அங்க இருக்கற ப்ரோஸஸ் பத்தி ஓரளவுக்கு தெரியும். இருந்தாலும்???" பரத் தயங்க, இலக்கியா "ஐயோ என்ன மனுஷன் இவரு...வாய்ப்பு வரும் போது கப்புனு பிடிக்க வேணாமா??? உக்காந்து யோசிச்சிட்டு இருக்காரு" என எண்ணியபடி மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள்.
"பரத், ராம் ஏற்கனவே உன் ப்ராஜெக்ட் ஒர்க் பத்தி பேசுனான். நீ ரொம்ப சீக்கிரமே எல்லாத்தையும் கத்துக்கறதா சொன்னான். அதனால எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. எனக்கு இதுல எந்த அப்ஜெக்ஷனும் இல்லை" என சொல்ல ராம்மும் அதை ஆமோதித்தான்.
"அப்போ சரி எல்லாரும் என் மேல வெச்சுருக்கற நம்பிக்கையை காப்பாத்த நான் முயற்சி பண்றேன்" என பரத் சொல்ல எல்லோரும் சிரித்தனர்.