தவறு!
என்னை மன்னிச்சிடுங்க! நான் வருகிறேன்......"
வாயிலை நோக்கி நடந்தவரை, எதிர்கொண்டார், பெரியவரின் மகன்!
அவர் கையில் ஒரு பெரிய பேக்கட்!
அதைப் பிரித்து, முதல் இனிப்பை சகாதேவன் வாயில் திணித்தார்.
பிறகு, மற்றவர்களுக்கு தந்துவிட்டு, தானும் வாயில் போட்டுக்கொண்டார்!
"ஐயா! நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்களுடன் நிதானமாகப் பேசி நெருங்கிப் பழகி அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளப் போகிறேன்.
ஐயா! என் பெயர் சரவணன்! இது என் மனைவி, பிரமீளா!
பெரிய குழந்தையின் பெயர், முத்து! நீங்கள் காப்பாற்ற உதவிய சின்னக் குழந்தையின் பெயர், மாணிக்கம்!
எங்களுக்கு தொழில் கறிகாய் மொத்த வியாபாரம்!
நல்ல வருமானம் கிடைக்கிறது.
காந்தி முதியோர் இல்லம் என்ற பெயரில், வயதான தம்பதிகளுக்கு அடைக்கலம் ஏற்பாடு செய்து தந்திருக்கிறோம்!
இப்பொழுது, நீங்கள் சொல்லுங்கள், உங்களைப்பற்றி!"
" என் பெயர் சகாதேவன்! எங்கப்பா பெயர் தர்மன்! அம்மா பெயர் பிரபா!
எனக்கு நான்கு சகோதரிகள், எல்லோருமே மூத்தவர்கள்!
நான் அவர்களை சந்தித்து பதினெட்டு வருஷங்கள் ஆகின்றன......"
" என்ன?"
பெரியவர், சரவணன், பிரமீளா, மூவரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தனர்!
" அவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள்? வெளியூரா? வெளிநாடா?"
" இந்த ஊரில்தான் இருக்கிறார்கள்........."
" பின் ஏன் அவர்களை சந்திக்கவில்லை? விரோதமா? உங்களைப்போன்ற நல்லவருடன் கூடவா, ஒருவர் விரோதம் பாராட்டமுடியும்?"
" விரோதம் ஏதுமில்லை........."
" பின் ஏன் சந்திக்கவில்லை? அதுவும் பெற்றவர்களைக்கூட நீண்ட காலமாக.......?"
" நான் சிறையில் இருந்தேன்........"
" சிறையா?"
அந்த குடும்பமே பயந்து நடுங்கியது!