" அப்பாவையும், தம்பியையும், தங்கச்சியையும் விட்டுப்போக, அண்ணனுக்கு எப்படி மனம் வந்தது?"
" என்னைப் பெற்றவர்களை சந்திக்கவில்லையா என நீங்கள்தானே கேட்டீர்கள்?"
" சரி, நியாயந்தான்! ஒரு நிமிஷம்!" என்று உள்ளே போனவர், தந்தையுடன் வெளியே வந்தார்!
அவர் கையில் ஒரு சிறிய தோல்பெட்டி!
" மகனே! தந்தை தருவதை தட்டாமல் நீ வாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும்....." என அந்தப் பெட்டியை நீட்டீனார்.
" இதிலென்ன, எனக்கு ஆடைகளா?"
" பணம்!"
" பணமா? எதற்கு?"
" நீங்கள் எங்களுக்காக செலவு செய்தீர்களே, அது......"
" நான் கணக்குப் பார்க்கவுமில்லை, தங்களிடம் சொல்லவும் இல்லையே!"
" எங்களுக்கு கணக்குப் போடத் தெரியுமே!"
" சரி, ஒரு பெட்டி நிறைய பணமா?"
" அதில் ஒரு லட்ச ரூபாய் உள்ளது! இப்போதைக்கு இதை வைத்துக்கொண்டு, பெற்றோரை சந்தித்து அவர்களுக்கும் சகோதரிகளுக்கும் தேவையானதை வாங்கிக் கொடுங்கள்! மீண்டும் இங்கு திரும்பி வந்து சேருங்கள்!
உங்களுக்கு ஒரு வேலை தயாராக வைத்திருக்கிறோம். அந்த வேலை தங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!"
" அப்படியா?"
" ஆமாம், முதியோர் இல்லத்தின் காப்பாளருக்கு வயதாகிவிட்டது, தன்னை விடுவிக்கச் சொல்லி வேண்டுகிறார். அவர் இடத்தில் நீங்கள்தான் காப்பாளராகப் பணி புரியப் போகிறீர்கள்!"
சகாதேவன் யோசித்தார்!
" இந்தப் பெட்டி எனக்கு இப்போது வேண்டாம், தேவைப்படும்போது, பெற்றுக்கொள்கிறேன்!
முதலில் எனக்கு தரப் போவதாக சொல்கிற அந்த காப்பாளர் வேலை, அந்த இல்லத்துக்கு அழைத்துப் போகிறீர்களா?"
சரவணனுக்கு பரம சந்தோஷம்!
இருவரும் உடனே இல்லத்தை அடைந்தனர்.
காப்பாளர், சகாதேவனுக்கு ஒவ்வொரு அறையிலுள்ள தம்பதிகளை அறிமுகப்படுத்திக்