இப்போது அவனுடைய கைகளில் கொஞ்சம் முத்துக்கள் இருக்கின்றன. அவற்றை அழகாக கோர்த்து மாலையாக்க வேண்டும். அவனால் முடியுமா?
நந்தினியின் பார்வையில் மனுகுட்டியின் அன்னையாக தெரியும் ரேச்சலை சத்யனுடைய வாழ்க்கை துணையாக மாற்ற முடியுமா…?
ம்… அதிலும் மீராவிற்கும் ரேச்சலுக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லை… மீரா அமைதியாக ஓடும் ஆறு எனில், ரேச்சல் சலசலத்து விழும் அருவி… மீரா இரவு நேரத்து தண்ணிலவு எனில் ரேச்சல் காலை நேரத்து இளம் சூரியன்… முக்கியமாக மீரா குத்து விளக்கு… ரேச்சல் மெழுகுவர்த்தி… சத்யனே சம்மதித்தாலும் வேற்று மதத்து பெண்ணை மருமகளாக்க அத்தை மாமா சம்மதிப்பார்களா…?. இதை சொன்னால்… அருமை பத்தினி நந்தினி 'என் செல்லம்… அதையும் நீதாண்டா செய்யணும்' என்று சொல்லி விடுவாள்.
அந்த ரேச்சல் இவனை செங்கல்லால் அடிக்கும் திட்டம் வைத்திருந்தாளாம்… இவனுக்கு அவளுடைய சுதந்திரம் வேணுமாம்…!. இரண்டு பேருக்கும் இடையே வேற எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிகிறது. அவ்வ்...
ரஞ்சனுடைய திறமைக்கு பல கோடிக்கு பிஸினஸ்ஸை உயர்த்தும் திட்டங்களுக்கு மூளையை பயன்படுத்தலாம்… ஆனால் மண்டைக்குள்ளே ஜீரோ வாட்ஸ் பல்பு அளவுகூட எரியாத இரண்டு ஃப்யூஸ் போன ட்யூப் லைட்களை சேர்த்து வைக்க ப்ளான் செய்யணுமாம். ஹும்…!
மீரா விஷயத்திலேயே சத்யன் இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லை. அதற்குள் நந்தினி 'என்ட் கார்டு' போட்டுட்டாளே… நந்தினியால் ரஞ்சனிடம் வெளிப்படையாக சொல்ல முடிந்த இந்த விஷயத்தை சத்யனிடம் அவனால் சொல்ல முடியுமா?. மீரா இல்லப்பா… நீ ரேச்சலை மனசுக்குள்ள யோசிச்சு வை.. அப்படினு சொல்ல முடியுமா என்ன?. அப்படி சத்யனை நினைக்க வைப்பது மலையை புரட்டி போடும் வேலைதானே…
ரஞ்சன் பலவாறு புலம்பிக் கொண்டு இருக்கும் போது… ஜெமி தனக்குள் ஒரே கேள்வியைதான் கேட்டுக் கொண்டு இருந்தான்.
இது ரேச்சல்தானா…?
அவனுக்கு சில விஷயங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தன. அவனுக்கு தெரிந்த ரேச்சலால்…
எடி போன்ற ஒரு ஆதரவற்ற சிறுவனுடன் அவளால் தோழமை கொள்ள முடியாது… ஸ்டேடஸ் பார்ப்பாள்..
ஷீலா ஆன்ட்டியின் மடியில் தலை வைத்து படுத்து கொஞ்ச முடியாது… வெறுப்புடன் விலகிதான் நிற்பாள்…
மேரியம்மாவின் உடல்நிலை சரியில்லாத மகளுடைய நலம் விசாரித்து தேவையானவற்றை