விஷயமா தேவைப்பட்டாலும் எனக்கு தயங்காம கால் பண்ணுங்க” என அவரிடம் விடைப் பெற்று கிளம்பினான்..
அவனது காரிடம் வந்தவன் கால்களால் தரையை உதைத்துக் கொண்டிருந்தான்.. ‘ச்ச இவ்ளோ தூரம் வந்தும் அவளை பார்க்க முடியலையே..’ என புலம்பிக் கொண்டே அவன் காரின் மீது சாய்ந்து கண் மூடி நின்றுக் கொண்டிருந்தான்.
பள்ளியில் பரிட்சை நடந்துக் கொண்டிருப்பதால் அரை நாளில் பள்ளி முடிவடைந்திருந்தது. பேப்பர் பண்டில்களை ஆஃபிஸில் வைத்துவிட்டு மணிக்கட்டை திரும்பி பார்த்துக்கொண்டே கேட்டின் அருகே வந்துக் கொண்டிருந்தாள் ஷைலாரண்யா. அப்பொழுது எதேச்சையாக அவளது கண்களில் ரிஷியின் கண்மூடி நின்று கொண்டிருந்த பிம்பம் கண்ணில் பட்டதும் ஆச்சரியத்துடன் ஒரு படப்படபான மனநிலைக்கு சென்றாள். ‘இவன் நம்ம இருக்கிற இடம் எல்லாம் வரான். கோ இன்சிடென்ஸ் அஹ் இல்லை ஃபாலோ பண்ணறானா? சரி இப்போ அவன்ட்ட பேசனுமா இல்லை கண்டுக்காம போயிரலாமா.’ சரி எதுக்கு வம்பு என அவள் பாட்டுக்கு பார்க்காத மாதிரி அவனை கடக்கும் பொழுது கரக்ட்டாக ரிஷி அவளை பார்த்துவிட்டான்.. துள்ளலுடன் அவளிடம் சென்றவன்,
“ஹை ஷைலாரண்யா.. எப்படி இருக்கீங்க.. என்ன அதுக்குள்ள ஸ்கூல் முடிஞ்சுதா?” ‘இப்போ தான டா பசங்க வெளிய போனது பார்த்த.. கேள்வி கேக்கனும்னு கேக்கறதப் பாரு’ என அவன் மனசாட்சி காரித்துப்ப.. அதையெல்லாம் ஃபூ என தள்ளிவிட்டு ஆர்வத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆப்பொழுது தான் அவனை கவனிப்பதுப் போல, போலி ஆச்சரியத்துடன் “ஹை ரிஷி சார்.. நல்ல இருக்கேன்.. பசங்களுக்கு எக்ஸாம் நடக்குது அதான்.. நீங்க என்ன இந்த பக்கம்?”
“உங்க லேப் ரெனோவேஷன் வர்க்காக ப்ரின்சிபால் பார்த்து பேச வந்தேன்.. அப்படியே எதேச்சையா உங்களையும் பாத்துட்டேன்”
அவனின் பதிலில் அவள் முகம் லேசாக வாடிற்று.. அதை கவனித்த ரிஷியின் முகம் குறும்பு புன்னைகையை சிந்த இருந்தும் அவளிடம் மறைத்துக்கொண்டு சாதரனமாக இருக்க, ஷைலுவும் க்ஷனநேரத்தில் சமாளித்துகொண்டு “ஓ அப்படியா சார்.. ஓகே.. அப்போ பார்க்கலாம்.. நான் கிளம்பறேன்..” என விடைப் பெற முயல
“எப்படி போறீங்க ஷைலாரண்யா.. நடந்தா? வெயிலா இருக்கு..நான் வேனா ட்ராப் பண்ணறேன்..” என அவன் உண்மையான அக்கறையுடன் கூற..
“என் கிட்ட குடை இருக்கு சார். ஆல்சோ வீடும் கிட்ட தான்.. எனக்கு இதுதான் கம்ஃபர்டபில்.. சரி வரேன்” என பட்டென்று சொல்லிவிட்டு சென்று விட்டாள். அவளின் உள்ளுணர்வுக்கு தெரிந்தது இருவருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு என.. ஆனால் அதை வளர