Page 10 of 10
என்ன செய்வதென்று தெரியாமல் பயத்துடன் உள்ளே நுழைந்தவள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
அவன் விழித்துக்கொண்டிராமல் உறங்கியிருந்தான். இருந்தாலும் அவள் மனதை சந்தேகம் அரித்துக்கொண்டேயிருந்தது.
அவளைக் கொட்டுவதற்கும், திட்டுவதற்கும் வாய்ப்பு கிடைத்தால் விடாமல் பற்றிக்கொள்கிறவன் எப்படி இந்தத் தனிமையில் எதுவும் செய்யாமல் விடுவான்? அவளுக்குப் புரியவில்லை.
அவன் என்ன செய்வான்? என்று எதிர்பார்த்தே என்று அவள் மனம் கேள்வி கேட்க பதில் தெரியாமல் விழித்தாள்.
வளரும்............