விட்டாங்க என்றால் இந்த உலகத்தை விட்டு போயிடுவாங்க... அதை விடும் வரை நமக்கு லாபம்... அவங்க விட்டாலும் இந்த பூமிக்கு லாபம். அதனால நான் தொடர்ந்த செஞ்சுகிட்டு இருந்தேன். நாம எப்படி விளம்பரம் செய்கிறோமோ அதே போல பலன் கிடைத்ததால் நல்லா சேல்ஸ் ஆனது. நம்ம பிஸினஸ் கொடி கட்டிப் பறந்தது.
ஆனா இவங்க அதுலயும் சில மாற்றங்களை செய்ய யோசித்தார்கள். ரொம்ப பாப்புலர் ஆக போய்கிட்டு இருந்த நம்மளோட நிறுவனத்தின் அந்த ப்ராடக்ட்ஸ் மேல அவங்களுக்கு சில சந்தேகம் வந்துச்சு. ஆக்சுவலா அது எல்லாத்தையும் ரெடி பண்ணி அனுப்பறது நானாக இருந்தாலும் அதை தயாரிக்கிறது நம்ம சித்தப்பா பையன். அதாவது நம்ம தம்பியோட பேர்ல தான் இருந்தது. அவனுக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது அவங்க யாருக்குமே தெரியாது.
அதனால அந்த விஷயத்தை பத்தி கொஞ்சம் வெளிப்படையாக பேச ஆரம்பிச்சாங்க. யாராலயும் எந்த குறையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆனா நம்ம தேடி கண்டுபிடித்து இருக்கிறோமே குயிலி இவளோட அம்மா அப்பா நம்மளோட அந்த ப்ராடக்ட் ல இருக்கிற குறைகளை கண்டுபிடித்து விட்டார்கள். அதை ப்ரூவ் செய்ய எல்லா டாக்குமெண்ட்ஸ்ம் ரெடி பண்ணிட்டாங்க. அதோட அந்த கம்பெனியோட ஒரிஜினல் உரிமையாளர் நான்தான் என்பதையும் தெரிஞ்சிட்டாங்க.
அப்போ அவர்கள் ஒரு நாள் என்கிட்ட அதை பத்தி பேசணும் அப்படின்னு சொன்ன போது எங்க ரெண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் உருவாகி நான் வெளியே வந்து விட்டேன்.
அதன் பிறகு நான் பண்ணிக்கிட்டு இருக்கிற எல்லா வேலைகளையும் அவங்க தெரிஞ்சிட்டாங்க. அதனால அவங்க என் மேல் கம்ப்ளைன்ட் கொடுப்பதற்கு ரெடி ஆயிட்டாங்க.
அந்த நேரத்தில்தான் நான் குயிலியோட அத்தை அதாவது அவங்க அம்மாவோட தம்பி வொய்ப்பை ஆள் வெச்சி தீர்த்துக்கட்டினேன். ஆக்சுவலா அது நான் குயிலி ஓட அம்மா அம்மாவுக்கு போட்ட ஸ்கெட்ச். அதுல தெரியாத்தனமா அவளோட அத்தை மாட்டிட்டாங்க. கொலை செய்ற அளவுக்கு நான் துணிந்து விட்டதை புரிஞ்சுகிட்டு அவங்க குயிலிக்கு பெயரை மாற்றி அம்மா அப்பா பேரு எல்லாத்தையும் மாற்றி சர்டிபிகேட் ரெடி செய்து அவளை அமெரிக்காவுக்கு அனுப்ப எல்லாம் ரெடி பண்ணிட்டார்கள்.
அமெரிக்கா நோக்கி கப்பல்ல போய்கிட்டு இருந்தாங்க. அப்போ தான் அவங்கள தீர்த்துக் கட்டுவது என்ற முடிவுடன் நம்மளோட ப்ராடக்ட் கம்பெனியோடு தொடர்புள்ள ஒரு நீர்மூழ்கி கப்பலில் இருந்து நாங்கள் செயல்பட்டோம் அவங்கள அந்த இடத்திலேயே யாருக்கும் தெரியாம அள்ளிச் செல்லலாம் என்று முடிவு பண்ணினேன்.
ஆனா அதுல ஒரு பெரிய விஷயம் என்னன்னா அவங்க சின்ன வயசுல இருந்தே